மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதுமையான கற்றல்: 20 ஆயிரம்‌ பள்ளிகளுக்கு இணைய வசதி அளித்த அரசு!

மாணவர்களின்‌ கற்றல்‌ கற்பித்தலை எளிமையாக்கும்‌ பொருட்டு பாடப்‌ பொருள்கள்‌ அனைத்தும்‌ காணொளி வாயிலாக எளிமையாகப்‌ புரிந்துகொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வளர்ந்துவரும்‌ தொழில்நுட்ப உலகில்‌ எதிர்காலத்திற்கு எற்ற வகையில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களைத்‌ தயார்படுத்தும்‌ பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதைக்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சரின்‌ சீரிய முயற்சியால்‌ தமிழ்நாடு அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வினை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.

புத்தகங்கள்‌ மற்றும்‌ கரும்பலகைகள்‌ வாயிலாக நடைபெற்ற கற்றல்‌ கற்பித்தல்‌ நிகழ்வின்‌ ஓர்‌ உச்சமாக உரைகள்‌, படங்கள்‌, ஆடியோ மற்றும்‌ வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்‌ தகவலைப்‌ பெபெற்று பாடப்‌ பொருள்களை எளிதாகப்‌ புரிந்துகொள்ளவும்‌, பெற்ற தகவல்களைத்‌ தக்கவைத்துக்‌ கொள்ளவும்‌ மற்றும்‌ அரசு பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்குத்‌ தொழில்நுட்பத்துடன்‌ பொருத்தமான கற்றல்‌ சூழலை உருவாக்கவும்‌ 8180 உயர்‌ தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும்‌ மற்றும்‌ 22,931 திறன்மிகு வகுப்பறைகள்‌ (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும்‌ 46712,742 மாணவ மாணவிகள்‌ பயனடையும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டு வருகின்றன.

6 Mbps இணைய வசதி

6,023 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள உயர்‌தொழில்நுட்ப ஆய்வகங்களில்‌ 5 மற்றும்‌ 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள்‌ பயன்படுத்தி வந்தனர்‌.

தற்போதைய நிலையில்‌ மாணவர்களின்‌ கற்றல்‌ கற்பித்தலை எளிமையாக்கும்‌ பொருட்டு பாடப்‌ பொருள்கள்‌ அனைத்தும்‌ காணொளி வாயிலாக எளிமையாகப்‌ புரிந்துகொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌ மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள்‌, மொழி ஆய்வகச்‌ செயல்பாடுகள்‌, மனவெழுச்சி நலன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கான மதிப்பீடுகள்‌ போன்றவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்மிகு வகுப்பறைகள்‌ மூலம் வழங்கப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளைப்‌ பள்ளிகளில்‌ மேற்கொள்வதற்கு ஏற்கனவே இருந்த 5 மற்றும்‌ 6 Mbps இணைய வேகத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்‌ட வருகிறது.

மொழி ஆய்வகங்கள்

இதன்மூலம்‌ 46 லட்சம்‌ மாணவர்கள்,‌ கடினமான பாடப்‌ பொருட்களை எளிமையாக காணொளி வாயிலாக கற்பதற்கும்‌ மாணவர்கள்‌ கற்ற பாடங்களை ஆன்லைன்‌ மதிப்பீடுகள்‌ மூலமாக பயிற்சிகள்‌ மேற்கொண்டு பாடக்‌ கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும்‌, உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப்‌ பெறுவதற்கும்‌, ஆங்கிலத்தில்‌ மொழிப்‌ புலமை பெற மொழி ஆய்வகங்களைப்‌ பயன்படுத்துவதற்கும்‌, கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக்‌ கொள்வதற்கும்‌ வழிவகை ஏற்படும்‌.

தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன்‌ இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌, இதுவரை 5,913 பள்ளிகளில்‌ இணையதள வசதி எற்படுத்தப்பட்‌டுள்ளது.

மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில்‌ 3,799 பள்ளிகளில்‌ இவ்வசதி எற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌ தொடக்கப்‌ பள்ளிகளைப்‌ பொறுத்தமட்டில்‌ மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில்‌ 10,620 பள்ளிகளில்‌ இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம்‌ கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 37,553 அரசுப்‌ பள்ளிகளில்‌ 20,332 பள்ளிகளில்‌ இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப்‌ பள்ளிகளுக்கு ஜுன்‌ மாத இரண்டாம்‌ வார இறுதிக்குள்‌ நிறைவடையும்‌ வண்ணம்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. வரும்‌ கல்வியாண்டு முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ/ மாணவிகள்‌ கற்றல்‌ செயல்பாட்டில்‌ புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள்‌ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget