மேலும் அறிய

பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை; எடுத்த நடவடிக்கைகள் என்ன?- பட்டியலிட்ட கல்வித்‌துறை!

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்‌ துறை விழிப்புணர்வு நடவடிக்கைகள்‌ குறித்து பள்ளிக் கல்வித்‌துறை அரசு செயலாளர்‌ தெரிவித்து உள்ளதாவது:

* பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல்‌ துன்புறுத்தல்களை தடுத்திட அரசு மேற்கொண்டு வரும்‌ முனைப்பான நடவடிக்கைகள்‌ அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்கள்‌ பாதுகாப்பு ஆலோசனைக்‌ குழு

* மாணவ, மாணவியர்‌ புகார்‌ தெரிவிக்க பாடநூல்களின்‌ பின்புற அட்டைகளில்‌ கட்டணமில்லா தொலைபேசி எண்கள்‌

* பள்ளிகளில்‌ மாணவர்‌ மனசு புகார்‌ பெட்டி

* மாணவ மாணவிகளை வெளியில்‌ அழைத்துச்‌ செல்ல பெற்றோர்‌ - உயர்‌ அதிகாரிகள்‌ அனுமதி பெறுதல்‌

* மாணவ மாணவியர்களிடம்‌ ஒழுங்கீனமாக நடப்பவர்கள்‌ மீது காவல்‌ துறை நடவடிக்கை

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல்‌ துன்புறுத்தல்‌ சார்ந்து பன்ளி நிர்வாகி மற்றும்‌ பள்ளி முதல்வர்‌ மீது காவல் துறையால்‌ குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால்‌ சிறப்பு அதிகாரி நியமனம்‌ செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம்‌ சிறப்பு அதிகாரிகளின்‌ நேரடி கட்டுப்பாட்டில்‌ கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவியல்‌ நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில்‌ பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல்‌ துன்புறுத்தல்‌  காரணமாக பள்ளி நிர்வாகி, முதல்வர்‌ மற்றும்‌ சார்ந்த ஆசிரியர்‌ மீது குற்றவியல்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ/மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும்‌பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின்‌ பின்பக்க அட்டையில்‌ 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள்‌ கொடுக்கப்பட்டு, பாலியல்‌ துன்புறுத்தல்‌ சார்ந்த விவரங்களை புகார்‌ அளிக்க மாணவ/மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும்‌ மாணவ/ மாணவியர்களின்‌ பாதுகாப்பை உறுதிசெய்யும்‌ பொருட்டு மாணவர்கள்‌ பாதுகாப்பு ஆலோசனைக்‌ குழு SSAC Student safeguarding advisory குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும்‌ மாதம்‌ ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார்‌ ஏதும்‌பெறப்படின்‌ அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்‌ மனசு

மேலும்‌ ஒவ்வொரு பள்ளியிலும்‌ "மாணவர்‌ மனசு” என்ற புகார்ப்‌ பெட்டி வைக்கவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள SSAC குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம்‌ குறித்து மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌ வாயிலாக பயிற்சி மற்றும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, பள்ளிகளில் இருந்து மாணவ/மாணவியர்களை என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் & Guide, JRC போன்ற அமைப்புகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ விளையாட்டு போட்டிகள்‌ காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச்‌ செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின்‌ பெற்றோரிடமும்‌ தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன்‌ பிறகு மாவட்டக்‌ கல்வி அலுவலரிடம்‌ ஒப்புதல்‌ பெறப்பட வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன் அனுமதி முக்கியம்

மேலும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச்‌ செல்லக்கூடாது எனவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, மாணவ/மாணவியரை வெளியே அழைத்துச்‌ செல்லும்‌ பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண்‌ ஆசிரியர்‌ எனவும்‌ 10 மாணவிகளுக்கு ஒரு பெண்‌ ஆசிரியை எனவும்‌ உடன்‌ செல்ல வேண்டும்‌ என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்‌ மாணவர்‌/ மாணவியர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல்‌ ஆசிரியர்கள்‌, ஆசிரியைகள்‌ உடன்‌ செல்ல வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறையைச்‌ சார்ந்த இயக்குநர்கள்‌/ இணை இயக்குநர்கள்‌ மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும்‌பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர்‌ நடவடிக்கைகள்‌ எடுக்க அரசால்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்களிடம்‌ ஒழுக்கக்கேடான முறையில்‌ நடந்து கொள்பவர்கள்‌ மீது காவல்‌ துறை வாயிலாக குற்றவியல்‌ நடவடிக்கை எடுப்பதுடன்‌ துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படு கிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

வீடியோ

Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget