மேலும் அறிய

Entrance Exam: பிளஸ் 2 மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?- அரசு வழிகாட்டல் 

2022 -2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். 

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌கீழ்‌ 2022 -2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் வெளியிட்டுள்ளார். 

நுழைவுத்தேர்வுகள்:

தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்கள்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ நுழைவுத்‌ தேர்வுகள்‌ எழுதி உயர்கல்வி படிப்புகள்‌ தொடரச்‌ செய்ய வேண்டும்‌ என்கின்ற நோக்கில்‌ அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்‌ அடிப்படையில் ஆர்வமுள்ள அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ சரியான நேரத்தில்‌ நுழைவுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விண்ணப்பங்கள்‌ விண்ணப்பிக்கத் தொடங்கும்‌ நாள்‌, முடிவடையும்‌ நாள்‌, கட்டண விவரம்‌ போன்றவற்றுடன்‌ தொடர்புடைய தேர்வு சார்ந்த தகவல்கள்,‌ கடிதத்தின்‌ வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி..?

இதன்‌ தொடர்ச்சியாக. ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் வாயிலாக, நாட்டு நலப்பணித்‌ திட்ட மாணவர்கள்‌ பள்ளிகளுக்கு வருகின்ற 04.01.2023 ஆம்‌ தேதி முதல்‌ நுழைவுத்‌ தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுடன்‌ இணைந்து மாணவர்களுக்கு உதவுவார்கள்‌.

அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள என்எஸ்எஸ் மாணவர்கள்‌ இதற்கான முன்‌ தயாரிப்பிற்காக 02.01.2023 மற்றும்‌ 03.01.2023 ஆம்‌ தேதிகளில்‌ பள்ளி தலைமையாசிரியருடன் இணைந்து பணியாற்றுவர்.

04.01.2023 ஆம்‌ தேதி முதல்‌ 31.01.2023 ஆம்‌ தேதி வரை என்எஸ்எஸ்  மாணவர்கள்‌, பள்ளிகளுக்கு வந்து நுழைவுத்‌ தேர்வுகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்களுடன்‌ இருந்து பூர்த்தி செய்ய உதவுவார்கள்‌.

நுழைவுத்‌ தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின்‌ தகவல்களை, ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும்‌ மாணவர்களிடம்‌ தாங்கள்‌ பயிலவிருக்கும்‌ உயர் கல்வி சார்ந்த நுழைவுத்‌ தேர்வு விருப்பங்களை கேட்டறிந்து. அவர்களை என்எஸ்எஸ் மாணவர்களோடு அமர வைத்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்‌ சார்ந்த தலைமை ஆசிரியர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


Entrance Exam: பிளஸ் 2 மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?- அரசு வழிகாட்டல் 

ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களால்‌ நுழைவுத்‌ தேர்வு விண்ணப்பித்தல்‌ சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள sensitization வீடியோக்களை அனைத்து மாணவர்களுக்கும்‌ ஹைடெக் ஆய்வகம் வாயிலாக காட்சிப்படுத்த வேண்டும். அதன் மூலம், விழிப்புணர்வை உண்டாக்கி ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்‌ தேர்வுகளையும்‌ மாணவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப விண்ணப்பிக்க ஊக்கமளிக்க வேண்டும்‌.

முதன்மை கருத்தாளர்கள்‌ அனைவரும்‌ தங்களுடைய மாவட்டத்திலுள்ள பள்ளிகளில்‌ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின்‌ தகவல்களை பெற்று 15.01.2023 க்குள்‌ மின்னஞ்சலில்‌ அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து முதன்மைக்‌ கருத்தாளர்களை அறிவுறுத்திட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget