மேலும் அறிய

Motivation: ஏழை மாணவர்கள் கல்விக்காக இரவில் கூலியாக உழைக்கும் கவுரவ விரிவுரையாளர்! நெகிழ்ச்சிக் கதை!

பகலில் கல்லூரி ஒன்றில் கவுரவ விரிவுரையாளர் ஆகவும் இரவில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலியாகவும் பணியாற்றி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உழைத்து வருகிறார் ஒடிசாவைச் சேர்ந்த 31 வயது இளைஞர் நாகேஷ்.

கல்வி மட்டுமே யாராலும் திருடவோ, அழிக்கவோ முடியாத செல்வம் என்பதை உணர்ந்தவர்களில் நாகேஷும் ஒருவர். 

அதனாலேயே என்னவோ பகலில் கல்லூரி ஒன்றில் கவுரவ விரிவுரையாளர் ஆகவும் இரவில் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலியாகவும் பணியாற்றி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உழைத்து வருகிறார் ஒடிசாவைச் சேர்ந்த 31 வயது இளைஞர் நாகேஷ்.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நாகேஷ் பத்ரோ. இவர் தினந்தோறும் காலையில் தனியார்  கல்லூரி ஒன்றில் கவுரவ விரிவுரையாளர் ஆகப் பணியாற்றி வருகிறார். இரவில் பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்தில் சுமை தாக்கும் தினக் கூலிப் பணியைச் செய்து வருகிறார். தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நாகேஷ் இந்தப் பணிகளைச் செய்யவில்லை. ஏழை மாணவர்களுக்காகத் தான் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்கவே இந்த வேலையை மேற்கொள்கிறார். 


Motivation: ஏழை மாணவர்கள் கல்விக்காக இரவில் கூலியாக உழைக்கும் கவுரவ விரிவுரையாளர்! நெகிழ்ச்சிக் கதை!

யார் இந்த பத்ரோ?

ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பத்ரோ. அப்பா ஆடுகளை மேய்த்துக் குடும்பத்தை கவனித்து வந்தார். வருவாய் வயிற்றுக்கும் வாய்க்குமே போதாமல் இருந்ததால், 2006-ல் உயர்நிலைப் பள்ளிக்கான தேர்வைத் தவறவிட்டார் பத்ரோ. வேலைக்குச் செல்லத் தொடங்கியவர் 2011-ல் ரயில்வே சுமை தூக்கியாகத் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார். அங்கு பணியாற்றிக் கொண்டே தொலைதூரக் கல்வி மூலம் 2012-ல் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடிவெடுத்தார். 

பிளஸ் 2 படிப்பை முடித்தவர், இளங்கலைப் படிப்பையும் தொடர்ந்து முதுகலைப் படிப்பை பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். இரவில் கூலியாகப் பணியாற்றிக் கொண்டே அனைத்துப் படிப்புகளையும் பத்ரோ வெற்றிகரமாக முடித்தார். 

அடுத்து நடந்தது குறித்துப் பேசும் இளைஞர் நாகேஷ் பத்ரோ, ’’கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டாமே என்று தோன்றியது. அதனால் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கற்பிக்க ஆரம்பித்தேன். நாட்கள் செல்லச் செல்ல மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. 


Motivation: ஏழை மாணவர்கள் கல்விக்காக இரவில் கூலியாக உழைக்கும் கவுரவ விரிவுரையாளர்! நெகிழ்ச்சிக் கதை!

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பயிற்சி மையத்தைத் தொடங்கி விட்டோம். கல்லூரிப் பணி முடிந்த பிறகு, மாலை பயிற்சி மையம் வந்து இந்தி மற்றும் ஒடியா மொழிகளை நானே கற்பிக்கிறேன். பிற பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களை அமர்த்தி இருக்கிறோம். 

இப்போது எங்களின் பயிற்சி மையத்தில் 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியமாக அளிக்க வேண்டியுள்ளது. ரயில் நிலையத்தில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை இதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். 

கவுரவ விரிவுரையாளர் பணி மூலம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை கிராமத்தில் வசிக்கும் தாய், தந்தையில் செலவுக்கு அனுப்பி விடுகிறேன். மக்கள் என்ன நினைப்பார்களோ, நினைத்துக் கொள்ளட்டும். எனக்குக் கற்பிக்கப் பிடிக்கும். ஏழை மாணவர்களுக்காக அதைத் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்’’ என்று விடை கொடுக்கிறார் நாகேஷ் பத்ரோ.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Embed widget