மேலும் அறிய

Free Breakfast Scheme: அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு: முக்கிய வழிகாட்டல்கள் வெளியீடு- என்னென்ன?

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுமார் 31 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளோடு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன்பெற உள்ளனர்.

இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’தமிழ்‌நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஏழைக்‌ சூழந்தைகளின்‌ படிப்பினை ஊக்குவிக்கவும்‌. ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டினைப் போக்கவும்‌. கற்றல்‌ இடைநிற்றலை தவிர்க்கவும்‌. முதலமைச்சர்‌ அறிவிப்பின்படி மாநகராட்‌ சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்‌ சி) மற்றும்‌ மலைப்‌ பகுதிகளில்‌ உள்ள 1545 அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும்‌ சத்தான சிற்றுண்டி வழங்கும்‌ நோக்கத்தில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.

பின் கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை மற்றும்‌ உயர்நிலைப் பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ 56,160 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டது.

முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவாக்கம்

பின்னர் தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள்‌ (மாநகராட்சி, நகராட்சி/ பேரூராட்சி) மற்றும்‌ ஊரகப் பகுதிகளில்‌ செயல்படும்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரும்‌ பயனடையும்‌ வகையில்‌ 31,008 அரசுப்‌ பள்ளிகளில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டது.

முதலமைச்சரால் தமிழ்நாட்டில்‌ ஊரகப்‌ பகுதிகளில் இயங்கி வரும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மேலும்‌ சுமார்‌ 2 இலட்சத்து 50 ஆயிரம்‌ மாணவர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ வரும்‌ கல்வி ஆண்டு முதல்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌ என அறிவிக்கப்பட்டது.

எனவே வரும்‌ கல்வியாண்டில்‌ (2024- 2025) இத்திட்டம்‌ ஊரகப்பகுதிகளில்‌ செயல்படும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ , மாணவியருக்கு பயன்‌ பெறும்‌ நோக்கில்‌ விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்நிலையில்‌ காலை உணவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டட அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ மதிய உணவு திட்‌டத்திற்கு வழங்கப்பட்டதுபோல்‌ இத்திட்டத்திற்கும்‌ அப்பள்ளியிலேயே தனியாக உணவுப்‌ பொருட்கள்‌ வைப்பதற்கும் சமையல்‌ செய்வதற்கும்‌ தேவையான இடவசதி அமைத்து கொடுப்பதற்கும்‌ இத்திட்டத்தை‌ முழுமையாகவும்‌ செம்மையாகவும்‌ செயல்படுத்துவதற்குத்‌ தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தாளாளர்‌, பள்ளித்‌ தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடவும்‌ அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்‌டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய குழு

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ தலைமையில்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து 1 வார காலத்திற்குள்‌ அப்பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத்‌ திட்டம்‌ அமல்படுத்துவதற்குத்‌ தேவையாக அனைத்து வசதிகளும்‌ இருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.

மேலும்‌. மாவட்ட ஆட்‌சியர்‌ தலைமையில்‌ ஊரக வளர்ச்சி சமூக நலத்துறை மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை அலுவலர்களை இணைத்து ஆலோசனை கூட்டம்‌ நடத்தி மாவட்ட அளவில்‌ இத்திட்டத்தினை சிறப்பாகவும்‌. செம்மையாகவும்‌ செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Normal vs Power Petrol: நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
Tata Tiago Petrol Vs CNG: வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
Embed widget