மேலும் அறிய

Foreign universities: இந்தியாவில் கல்லூரிகளை திறக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்...ஆன்லைன் கோர்சுகளை எடுக்க அனுமதி இல்லை..!

இந்தியாவில் கிளைகளை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் முதற்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை திறக்க அனுமதிப்பதற்கான ஒழுங்குமுறை வரைவை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கிளைகளை திறக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆல்னைல் கோர்சுகளை எடுக்க அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்தியாவில் கிளைகளை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் முதற்கட்டமாக 10 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நேரடி வகுப்புகளை கொண்ட முழு நேர கோர்சுகளை நடத்தலாம் என்றும் தொலைதூர படிப்புக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தங்களுடைய சொந்த சேர்க்கை முறையை நடத்தவும் கட்டணத்தை வசூலிக்கவும் இந்தப் பல்கலைக்கழகங்கள் சுதந்திரம் பெற்றிருக்கிறது.

இந்திய கிளைகளில் வழங்கப்படும் கல்வியின் தரமானது தங்கள் முக்கிய பல்கலைக்கழத்திற்கு இணையாக வழங்குவதை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்  உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

வெளிநாட்டு பல்கலைக்கழங்கள், பெற்று கொள்ள அனுமதிக்கக்கூடிய நிதி உதவி குறித்து பேசிய அவர், "அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு ஏற்ப, வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் நிதி நன்கொடை பெற்று கொள்ளலாம்.

இந்திய சட்டங்களின்படி உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் செயல்படும். அவர்கள் இந்தியாவின் விதிகள் மற்றும் சட்டங்களின்படி வருடாந்திர அறிக்கைகள் மற்றும் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானிய குழு இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவி, ஆணையத்தின் இறுதி அனுமதியைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயல்பட வேண்டும்

இறுதி ஆண்டில் (9 ஆண்டு கால செயல்பாட்டிற்குப் பிறகு) கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய செயல்திறன் அறிக்கை சமர்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பிறகு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்." என்றார்.

இந்திய மாணவர்களின் நலனை கருதி, "பல்கலைக்கழக மானிய குழுவின் முன் அனுமதியின்றி வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனகள் எந்தவொரு கோர்சுகளையும் கல்லூரி கிளைகளையும் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

எந்தவொரு கல்வி நிறுவனமும் ஆணையத்தால் வரையப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறினால் அல்லது மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதேபோல, விதிகளை மீறும் பட்சத்தில், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை இடை நிறுத்தம் செய்ய பல்கலைக்கழக மானிய குழுவுக்கு அதிகாரம் உள்ளது" என்றார்.
 

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget