மேலும் அறிய

அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி; 60,000 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?

தகுதியிருந்தும் வேலையில்லாமல் 60,000-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கணினி கல்வியை குழிதோண்டிப் புதைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா, 60,000 கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை திராவிட மாடல் கேள்விக்குறியாக்கி உள்ளதாக, குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’செயற்கை நுண்ணறிவு (AI), பிளாக்செயின் (Blockchain) என உலகம் நான்காம் தொழிற்புரட்சியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் என்ற ஒரு பாடமே முறையாக இல்லை என்பது இந்த 'திராவிட மாடல்' அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சாட்சியமாக நிற்கிறது.

கணினியை இயக்கக் கூடத் தெரியாமல் நம் மாணவர்கள் தொழில்நுட்பப் புரட்சியிலிருந்து அந்நியப்படுத்தப்படும் அதேவேளையில், தகுதியிருந்தும் வேலையில்லாமல் 60,000-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இவர்களுக்கான ஊதியத்தை வழங்கத் தயாராக இருந்தும், இந்த விடியா அரசு இவர்களை வஞ்சிக்கிறது.

மத்திய அரசின் தரவுத்தளத்தில் மாபெரும் பொய் - திமுக அரசின் டிஜிட்டல் மோசடி!


2022-ஆம் ஆண்டிலேயே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் (ICT Labs) அமைக்கப்பட்டு, முழுநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் 'UDISE+' தரவுத்தளத்தில் அப்பட்டமான பொய்யைத் பதிவு செய்து, மத்திய அரசை ஏமாற்றியுள்ளது இந்த திமுக அரசு. ஆனால், இரண்டாண்டுகள் கழித்து,
2024-ல் தான், அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே கணினி ஆய்வகங்கள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். இது நிதியைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் டிஜிட்டல் மோசடி.

ஆசிரியர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற அவமதிப்பு - தகுதியானவர்களுக்கு துரோகம்!


பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக, கணினி அறிவியலில் பி.எட். (B.Ed.) பட்டம் பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்து, கேரளாவைச் சேர்ந்த 'KELTRON' என்ற தனியார் நிறுவனம் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த 'இல்லம் தேடி கல்வி’ திட்டப் பணியாளர்களை நியமித்து
வருகிறது இந்த அரசு.

அவர்களைக் கொண்டு EMIS எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு பணிகளையும்,DATA ENTRY வேலைகளையும் செய்வது, முறையாகப் படித்துப் பட்டம் பெற்ற 60,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல்
ஆசிரிர்களின் வயிற்றில் அடிக்கும் செயல். மத்திய அரசு கணினி ஆசிரியர்களின் ஊதியத்திற்காக நிதியை வழங்கும் நிலையில், அவர்களை நியமிக்காமல் தற்காலிகப் பணியாளர்களை வைத்து ஏமாற்றுவது யாருடைய நலனுக்காக? இது அப்பட்டமான துரோகம்.

மத்திய அரசின் நிதியை முறைகேடு செய்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக அரசு!

ஒருபுறம் மத்திய அரசு நிதி தரவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும், மறுபுறம் கொடுத்த நிதியை கையாடல் செய்வதும் திமுக அரசின் வாடிக்கையாகிவிட்டது. 2021 ஆண்டு முதல் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா ICT திட்டத்தின் கீழ் கணினி ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர் ஊதியங்களுக்காக வழங்கப்பட்ட நிதியை இந்த திமுக அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை.

இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி, முழுப் பணத்தையும் முறைகேடு செய்துள்ளது. மேலும், ₹1076 கோடி மதிப்பிலான ஆய்வகங்கள் அமைக்கும் டெண்டரை, தமிழ்நாட்டில் தகுதியான நிறுவனங்களே இல்லாதது போல, கேரள நிறுவனத்திற்கு வழங்கியதன் மர்மம் என்ன?

இரண்டு நாள் பயிற்சியில் கணினி வல்லுநர்கள் - விடியா அரசின் விபரீத விளையாட்டு!

ஏற்கெனவே, சுமார் ஒரு லட்சம் ஆசிரியர் காலிப் பணியிடங்களால் தவித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவது போல, அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு இரண்டே நாட்களில் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.


கணினியை எப்படி இயக்குவது என்ற அடிப்படை கூடத் தெரியாத மாணவர்களுக்கு, 'TN SPARK' மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) பாடம் எடுக்கப் போவதாகக் கூறுவது. அ, ஆ தெரியாத குழந்தைக்கு கற்பராமாயணம் நடத்துவதைப் போல உள்ளது. இந்த விடியா அரசு, புத்தகங்களை வெளியிட்டுவிட்டதே தவிர, வேறு ஒன்றும் இல்லை.


பாஜக இளைஞர் அணியின் சார்பாக திமுக அரசிடம் வைக்கும் கோரிக்கைகள்:

மத்திய அரசின் 'UDISE+' தரவுத்தளத்தில் பொய்த் தகவல் அளித்து, நிதியைப் பெற முயன்றது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசின் நிதி உதவியைப் பயன்படுத்தி, தகுதியான, B.Ed., பட்டம் பெற்ற 60,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் ஆசிரியர்களை உடனடியாக நிரந்தரப் பணியில் நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

'TN SPARK' போன்ற கண்துடைப்புத் திட்டங்களைக் கைவிட்டு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு முழுமையான, தனிப் பாடமாக அறிவித்து, அண்டை மாநிலங்களுக்கு இணையாக முறையான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்தது குறித்தும், வெளிமாநில நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சொல்லில் வீரர்கள், செயலில் பூஜ்ஜியம் என்பதை திமுக அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.

இனியும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக இளைஞர் அணி வேடிக்கை பார்க்காது. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget