HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
HOLIDAY : விடுமுறை எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை
விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் சற்று மன ஆறுதலையும் மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே விடுமுறை நாட்களில் உறவினர் விட்டிற்கோ அல்லது சுற்றுலாவிற்கோ செல்ல திட்டமிடுவார்கள். அந்த வகையில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும் அந்த வகையில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினமாகும் எனவே தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு தொடர் விடுமுறை
அதே நேரம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆம் தேதி ஆகிய 3 தினங்கள் விடுமுறையானது விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி பொதுவிடுமுறையானது விடப்பட்டிருப்பதாகவும், அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 29ம் தேதி பணி நாளாக செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அத்தியாவசிய பணிக்காக அலுவலர்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூரப் பெருவிழா
மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 55-வது ஆண்டு ஆடிப்பூரப் பெருவிழா ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ப நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று ஆதிபராசக்தி அம்மனை வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி ஆகஸ்ட் 13-ஆம் தேதி கலச விளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆடிப்பூர விழா, கஞ்சி வார்த்தல், பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















