மேலும் அறிய

Coaching Centres: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதியில்லை; பொய் வாக்குறுதி கூடாது- பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு செக்!

Coaching Centres New Guidelines: தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக்கூடாது..

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது. அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, பயிற்சி மையங்களுக்கு அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்து உள்ளதாவது:

16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.

என்ன காரணம்? 

பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தற்கொலை, தீ விபத்துகள், வசதிக் குறைபாடு, மாணவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததை அடுத்து, பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் பறந்தன. இதை அடுத்து பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

என்னென்ன விதிமுறைகள்?

* பயிற்சி மைய ஆசிரியர்கள் பட்டப் படிப்பைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் தகுதி, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும். 

* தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.  

*  பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றில் மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

* பயிற்சி மைய வளாகங்களில் மாணவர்களுக்கு போதிய இட வசதி அளிக்க வேண்டும்.

* 16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* மன அழுத்தத்தைத் தவிர்க்க இணைச் செயல்பாடுகள் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.

* அதேபோல மாணவர்களின் மன நலனைப் பேண உயர் கல்வி வழிகாட்டல், உளவியல் பயிற்சிகள் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும்.

* இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பயிற்சி மையங்களின் அங்கீகார அனுமதி ரத்து செய்யப்படும்.

அபராதம் என்ன?

* மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 

* முதல் முறை செய்யும் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

* இரண்டாவது முறை இழைக்கப்படும் குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 

* அடுத்தடுத்த முறை விதிமீறல்கள் இழைக்கப்பட்டால், பயிற்சி மையங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படும். 

இவ்வாறு மத்திய அரசு பயிற்சி மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. 

இதுகுறித்து முழுமையாக அறிய: https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/Guideliens_Coaching_Centres_en.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

இதையும் வாசிக்கலாம்: ASER 2023: தாய்மொழியிலேயே திணறும் மாணவர்கள்; கணக்கிலும் மோசம்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! 
அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! 

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
Embed widget