மேலும் அறிய

Coaching Centres: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதியில்லை; பொய் வாக்குறுதி கூடாது- பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு செக்!

Coaching Centres New Guidelines: தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக்கூடாது..

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது. அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவோம் என்று பொய் வாக்குறுதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, பயிற்சி மையங்களுக்கு அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்து உள்ளதாவது:

16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.

என்ன காரணம்? 

பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தற்கொலை, தீ விபத்துகள், வசதிக் குறைபாடு, மாணவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததை அடுத்து, பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் பறந்தன. இதை அடுத்து பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

என்னென்ன விதிமுறைகள்?

* பயிற்சி மைய ஆசிரியர்கள் பட்டப் படிப்பைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் தகுதி, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும். 

* தவறான வாக்குறுதிகள், உத்தரவாத ரேங்க், உயர் மதிப்பெண்கள் ஆகிய வாக்குறுதிகளைப் பயிற்சி மையங்கள் அளிக்கக் கூடாது.  

*  பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றில் மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

* பயிற்சி மைய வளாகங்களில் மாணவர்களுக்கு போதிய இட வசதி அளிக்க வேண்டும்.

* 16 வயதுக்கு முன்னால் பயிற்சி மையங்கள், மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உயர்நிலைப் பள்ளியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* மன அழுத்தத்தைத் தவிர்க்க இணைச் செயல்பாடுகள் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.

* அதேபோல மாணவர்களின் மன நலனைப் பேண உயர் கல்வி வழிகாட்டல், உளவியல் பயிற்சிகள் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும்.

* இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பயிற்சி மையங்களின் அங்கீகார அனுமதி ரத்து செய்யப்படும்.

அபராதம் என்ன?

* மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 

* முதல் முறை செய்யும் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

* இரண்டாவது முறை இழைக்கப்படும் குற்றத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 

* அடுத்தடுத்த முறை விதிமீறல்கள் இழைக்கப்பட்டால், பயிற்சி மையங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படும். 

இவ்வாறு மத்திய அரசு பயிற்சி மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. 

இதுகுறித்து முழுமையாக அறிய: https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/Guideliens_Coaching_Centres_en.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

இதையும் வாசிக்கலாம்: ASER 2023: தாய்மொழியிலேயே திணறும் மாணவர்கள்; கணக்கிலும் மோசம்- அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
Free LPG Cylinder: ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
Embed widget