![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
![KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு Closing of Kindergarten Classes in Government Schools KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/07/03c091f70a19f2c3db190b20b05a8390_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் கல்வியாண்டில் இருந்து எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளைப் பள்ளிக் கல்வித்துறை நடத்தாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக சமூக நலத்துறையின்கீழ் இயங்கும் அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி, மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைகள் உறுதிப்படுத்தி உள்ளன.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நடவடிக்கைக்குக் கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேரக் கிளம்பியுள்ளன.
மேலும் படிக்க: KG Admission: அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)