மேலும் அறிய

’மாநில அரசின் சம்மதத்தோடுதான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது’ - மத்திய அரசு விளக்கம்

கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றும் 1976ம் ஆண்டு சட்டத்திருத்தம் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலுடனேயே நிறைவேற்றப்பட்டது -மத்திய அரசு

மாநில சட்டமன்றங்கள் அங்கீகரித்த பின்னரே கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.  

மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ‘கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றும் 1976ம் ஆண்டு சட்டத்திருத்தம் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலுடனேயே நிறைவேற்றப்பட்டது என்றும் இதனால் கூட்டாட்சி அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை ஏனெனில் கல்வி ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை அது பொதுப்பட்டியலில்தான் உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.


’மாநில அரசின் சம்மதத்தோடுதான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது’ - மத்திய அரசு விளக்கம்

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் இன்றுகாலை மத்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1976 பிரிவு 57 குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தப் பிரிவின் கீழ்தான் மத்திய மற்றும் மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே சட்டமியற்றும் வகையில் கல்வித்துறை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சட்டத்திருத்தம் கூட்டாட்சித்தத்துவத்துக்கு எதிராக இருப்பதாகவும் கூட்டாட்சித்தத்துவம்தான் அரசியல் அமைப்புக்கு அடிப்படையானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு இதுதொடர்பான விளக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் 8 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

’உறுப்பை ஒருபட்டியலில் இருந்து மற்றொரு பட்டியலுக்கு மாற்றுவது மத்திய அரசால் தன்னிச்சையாகச் செய்ய முடியாது என்றும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்றும்’ அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் அளித்த விளக்கத்தை அடுத்து நீதிமன்ற அமர்வு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தொடர்ந்திருந்த வழக்கில்தான் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  எழிலன் எம்.எல்.ஏ, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்பர் அலி மற்றும் சி.டி.செல்வம், தி இந்துவின் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறம் செய்ய விரும்பு என்னும் அமைப்பின் கீழ் இந்த வழக்கைத் தொடர முடிவு செய்திருந்தனர். 

இதுகுறித்து எழிலன் நாகநாதன் அளித்த விளக்கத்தில் ’இந்தியா மாகாணங்களாக இருந்த காலத்திலேயே கல்வி மாகாணங்களின் பட்டியலில்தான் இருந்தது. இந்திய அரசியல் சட்ட்டம் 1935 அதற்கு உதாரணம். சுதந்திரத்துக்குப் பிறகும் கூட கல்வியை மாநிலப்பட்டியலில் வைப்பதுதான் நல்லது என அரசியலமைப்புச் சட்டத்தை வரைவு செய்தவர்களும் நம்பினார்கள்’
மேலும், ‘அரசியலமைப்பு மன்றமே கூட கல்வியை மாநிலப்பட்டியலில் வைப்பதற்குதான் தொடர்ந்து போராடியது. மராத்திய சுதந்திரப் போராட்ட வீரர் சர்வதே கூறுகையில் கூட கல்வி வாய்ப்பு போதாமையில் இருக்கும் மாகாணங்களில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படாமல் இருப்பதே நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்’ எனவும் தனது கருத்தில் பதிவு செய்திருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget