மேலும் அறிய

CBSE Syllabus: 2025 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய மாற்றங்கள்; சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு- என்னென்ன தெரியுமா?

வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

2025ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக பாடத்திட்டம் 15 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட உள்ளது. இந்தூரில் நடைபெற்ற, ’இடைவெளியைக் குறைக்கும்’ பள்ளி முதல்வர்களுக்கான மாநாட்டில் சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் இதை அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

இதன்படி அனைத்து பாடங்களிலும் 15 சதவீத அளவுக்குப் பாடத்திட்டம் அளவுக்குக் குறைக்கப்படுள்ளது. வெறுமனே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து முக்கியப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் படிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மதிப்பீட்டு முறையிலும் மாற்றம்

இறுதித் தேர்வில் மொத்தமுள்ள 100 மதிப்பெண்களுக்கு, 60 சதவீத மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டும் மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைய உள்ளன. இதில், புராஜெக்டுகள், அசைன்மெண்ட்டுகள் மற்றும் குறிப்பிட்ட கால சோதனைகள் ஆகியவை அக மதிப்பீடுகளாக இருக்கும். இது மாணவர் திறன்களை மதிப்பிடுவதில் மிகவும் விரிவானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விடைத் தாள்களுக்கு டிஜிட்டல் மதிப்பீடு அறிமுகம்

அதேபோல விடைத் தாள்களுக்கு டிஜிட்டல் மதிப்பீடு முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மதிப்பீடு செய்வதன் செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கில இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு திறந்த பாடப் புத்தக முறையும் கொண்டு வரப்பட உள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் மனப்பாடம் செய்வதை சோதிப்பதற்கு பதிலாக விமர்சன சிந்தனை மற்றும் பயன்பாட்டுத் திறன்களை சோதிப்பதாகும்.

எத்தனை முறை பொதுத் தேர்வு?

2025ஆம் ஆண்டு ஒரே ஒரு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், 2026-ல் இரு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு சிபிஎஸ்இ போபால் மண்டல அலுவலர் விகாஸ் குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
உங்களுக்கு Ph.D படிக்கும் ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரிய வாய்ப்பு!
உங்களுக்கு Ph.D படிக்கும் ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரிய வாய்ப்பு!
Free Student Hostels : ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
ஒரு ரூபாய் செலவு இல்லை.! மாணவர்களுக்கு இலவச விடுதி- யார் யாருக்கெல்லாம் அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!
பள்ளிகளில் நாத்திக கொள்கைகளா? தமிழக மக்களோடு விளையாட வேணாம்- தவெக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை!

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது சிறுமி ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது சிறுமி ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
DMK Slams Rahul Gandhi : ‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ காலையிலேயே ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
Maruti Celerio: 34KM மைலேஜ் தரும் மாருதியின் ஹேட்ச்பேக் - பட்ஜெட்டில் 3 ஸ்டார் ரேட்டிங், ரூ.9000 EMI திட்டம் - முழு விவரம்
34KM மைலேஜ் தரும் மாருதியின் ஹேட்ச்பேக் - பட்ஜெட்டில் 3 ஸ்டார் ரேட்டிங், ரூ.9000 EMI திட்டம் - முழு விவரம்
Thirumavalavan: நான் தேர்தலில் நிற்காமல் போனதற்கு திமுக தான் காரணம்.. ஒப்புக்கொண்ட திருமாவளவன்!
Thirumavalavan: நான் தேர்தலில் நிற்காமல் போனதற்கு திமுக தான் காரணம்.. ஒப்புக்கொண்ட திருமாவளவன்!
TVK Govt: ”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் - தவெக அரசு அதிரடி
”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் - தவெக அரசு அதிரடி
Tamilnadu Round Up: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, கனிமொழி கண்டனம், எகிறிய தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, கனிமொழி கண்டனம், எகிறிய தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget