மேலும் அறிய

CBSE Results 2024: எந்த நேரமும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம்: சிபிஎஸ்இ தகவல்

நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதி, தேர்வு முடிவுகளைக் காத்திருக்கின்றனர்.

மே 20ஆம் தேதி என்றில்லை. எந்த நேரமும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இந்த ஆண்டு 12.38 லட்சம் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

மே 12ஆம் தேதி வெளியான 2023 தேர்வு முடிவுகள்

கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில், 10ஆம் வகுப்புத் தேர்வை 20,16,779 மாணவ- மாணவிகள் எழுதினர். இதில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 90.68 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.  

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது (CBSE Board exam result date 2024) என்று கேள்வி எழுந்தது. சில போலித் தேதிகள் கூட இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து மே 20ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எந்த நேரமும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்

இந்த நிலையில் எந்த நேரமும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ திறன் கல்வி மற்றும் பயிற்சி இயக்குனர் பிஸ்வஜித் சாஹா தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ’’தேர்வு முடிவுகள் குறித்த துல்லியமான தேதியை என்னால் கூற முடியாது. ஏற்கெனவே மே 20ஆம் தேதிக்குப் பிறகே 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்து இருந்தோம்.

தேர்வு முடிவுகள் அறிவிப்புப் பணியில் சிபிஎஸ்இ வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகளை நாங்கள் எந்த நேரத்திலும் வெளியிடுவோம். மே 20ஆம் தேதிக்கு முன்னதாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம்’’ என்று பிஸ்வஜித் சாஹா தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக, அனைத்துப் பாடங்களிலும் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம் ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cbseresults.nic.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
Breaking News LIVE: கேரளாவில் எர்ணாகுளத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் - தயார் நிலையில் மீட்புக்குழு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
Embed widget