மேலும் அறிய

Anna University: ஆளுநர் நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலை. இட்ட உத்தரவு: சர்ச்சையானதால் துணை வேந்தர் விளக்கம்

ஆளுநர் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டால்தான் வருகைப் பதிவு அளிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆளுநர் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டால்தான் வருகைப் பதிவு அளிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதற்கு துணை வேந்தர் வேல்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

விடுதலைப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 23ஆம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1919ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான பேரைக் கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. காந்தி , நேதாஜி போஸ் என்கிற இருபெரும் அரசியல் துருவங்களை உருவாக்கியது இந்த சம்பவம்தான்.

ஜெனரல் டயர் நடத்திய கொலைவெறியாட்டத்துக்குப் பிறகு முதன்முறையாகப் பஞ்சாப் சென்ற காந்தி, டயர் மற்றும் பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யச் சொல்லி பிரிட்டிஷ் அரசுக்கு முறையிட்டார். ஆனால் நீதி கிடைக்கவில்லை. கிடைக்கப்பெறாத நீதி காந்தியை அகிம்சை வழியிலான ஒத்துழையாமையைக் கையில் எடுக்கச் செய்தது, நேதாஜி என்னும் சிவில் சர்விஸ் தேர்வு மாணவனை நேரெதிராக ஆயுதப் போராட்டத்தை நம்பச் செய்தது.

127ஆவது பிறந்தநாள் விழா

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 23ஆம் தேதி) நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் கவுரவிக்கப்பட்டனர். தியாகிகளின் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொண்டனர். அண்ணா பல்கலை. விவேகானந்தர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள இசிஇ, சிஎஸ்இ மற்றும் ஐ.டி. துறை மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கிண்டி வளாக அண்ணா பல்கலைக்கழகத் முதல்வர் (CECG), சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு இதுதொடர்பாக சுற்றிக்கை அனுப்பி இருந்தார்.


Anna University: ஆளுநர் நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலை. இட்ட உத்தரவு: சர்ச்சையானதால் துணை வேந்தர் விளக்கம்

கிளம்பிய சர்ச்சை

இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் , ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும், அப்போதுதான் வருகை பதிவு எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு மணி நேர ஆய்வகப் பயிற்சி இருந்ததாகவும், அதைத் தவிர்த்து அவர்கள் விழாவில் பங்கேற்க வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்குத் துணை வேந்தர் வேல்ராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். வருகைப் பதிவு கட்டாயம் ஆக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget