மேலும் அறிய

Board Exams: 10, 12ஆம் வகுப்புகளுக்கு இனி 2 பொதுத்தேர்வுகள்; யாருக்கெல்லாம்? - மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்

நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறி உள்ளதாவது:

’’பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ போல, ஆண்டுக்கு 2 முறை 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை மாணவர்கள் எழுதலாம். அதில் சிறப்பான மதிப்பெண்களை அவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். எனினும் இது முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுவதுதான். இதில் கட்டாயம் இல்லை. 

தேவையில்லாத பதற்றம்

ஆண்டுக்கு ஒற்றை வாய்ப்பு மூலம் மாணவர்கள் தேவையில்லாத பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். தங்களின் வாய்ப்பு பறிபோய் விட்டதாகவும் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றும் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.  இதைத் தவிர்க்க ஆண்டுக்கு 2 முறை தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.  

நேர்மறையான விமர்சனங்களே வந்தன

ஒரு மாணவர் தான் முழுமையாகத் தயாராகி விட்டதாகவும் முதல் முறை பெற்ற மதிப்பெண்களே போதும் என்று முடிவு செய்துவிட்டாலும் அவர், 2ஆவது முறை தேர்வில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. எனினும் இதுகுறித்த அறிவிப்பு வெளியானபோது மாணவர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களே வந்தன. மாணவர்களைச் சந்தித்தபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2024 முதலே தேர்வை, ஆண்டுக்கு 2 முறை நடத்த முயற்சித்து வருகிறோம். 

கோட்டா தற்கொலைகள் மிகவும் சென்சிட்டிவான விவகாரம். எந்த ஓர் உயிரும் போகக்கூடாது. அவர்கள் நம்முடைய குழந்தைகள். நாம்தான் அவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதை கூட்டாகச் சேர்ந்து உறுதி செய்ய வேண்டும். பயிற்சி (coaching) தேவைப்படாமலே மாணவர்கள் படிப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். 

தேவை மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education - CABE)  விரைவில் மாற்றி அமைக்கப்படும்.’’

இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

கோட்டாவில் என்னதான் நடக்கிறது?

போட்டி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கோட்டாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கோட்டா பயிற்சி மையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை 60 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டு 23 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது இருப்பதிலேயே மிகவும் அதிகம் ஆகும்.

இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget