மேலும் அறிய

Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!

’’அண்ணா பல்கலைக்கழக பெண் பேராசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நிர்வாகம் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றதால் கொளுத்தும் வெயிலிலும் குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறோம்’’

திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், 9-வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தை நிறுத்த பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்வதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எனினும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதவிப் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!

நாங்க என்ன தப்பு செஞ்சோம்?

இதுகுறித்து திருச்சி வளாகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர் சரவணக் குமார் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ’’நாங்க என்ன தப்பு செஞ்சோம்? 13 வருஷமா அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்மையா உழைச்சதுக்கு எங்களுக்குக் கிடைச்ச பரிசுதான் இந்த பணி நீக்கமா?

படிப்புக்கும் பணிக்கும் எந்த மரியாதையும் இல்லையா?

குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும் மதிப்பு, மரியாதை இருந்தது. எங்களைப் பணிநீக்கம் செய்து, மாணவர்கள் மத்தியில் அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். எங்கள் பிஎச்.டி படிப்புக்கும் இத்தனை ஆண்டுகள் பணி அனுபவத்துக்கும் எந்த மரியாதையும் இல்லையா?

நாங்கள் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கோ, அரசுக்கோ எதிராகப் பேசவில்லை. உண்மையை, உரிமையையே கேட்கிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும்’’ என்று சரவணக் குமார் தெரிவித்தார்.

உதவிப் பேராசிரியர் பத்மா வேதனை மல்கப் பேசினார். ’’பெண் பேராசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் நாங்கள் பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துவிட்டது. இதனால் கொளுத்தும் வெயிலிலும் குடை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.


Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!

மருத்துவமனையில் அனுமதி

பெண் பேராசிரியர்களுக்கு மாதாந்திர பிரச்சினைகளோடு, சிறுநீர்த் தொற்று, மயக்கம், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் மன உறுதியோடு, தொடர்ந்து 9ஆம் நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

எங்களுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, மாணவ சமுதாயத்துக்கு அநியாயம் செய்துகொண்டு இருக்கிறார்கள். போராட்டத்தை நாங்கள் நிறுத்தப் போவதாக இல்லை. எங்களின் உரிமை எங்களுக்குக் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என்று தற்காலிக உதவிப் பேராசிரியர் பத்மா உறுதிபடத் தெரிவித்தார்.


Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!

கற்றல் பாதிப்பு

தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்களின் கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கும் நிரந்தர ஆசிரியர்களால் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரப்போகும் இன்டர்னல் தேர்வை எப்படி மாணவர்கள் எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இறுதி ஆண்டு புராஜெக்ட் மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக மாறி இருக்கிறது என்றும் இந்த ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
வெயில் இருந்தும் நிழல் இல்லை! புதுச்சேரியில் நடந்த வானியல் அதிசயத்தை நேரில் பார்த்த மாணவர்கள்!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Holiday : மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 25, 26 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!
நீட், நெட் சர்ச்சைகள்: கடுமையாகும் தேர்வு முறை- என்டிஏ நிபுணர்கள் குழு மறுசீரமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget