டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
ஆசிரியர்களுடைய பணி அனுபவம் உயர் கல்வித் தகுதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு நடத்தப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முக்கியக் கோரிக்கைகள் சிலவற்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூறும்போது, ‘’குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 அமலுக்கு வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் நியமனங்கள் அன்றைய நடைமுறை விதிகளின்படி நடைபெற்றவை.
எனவே, முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, அனுபவம், சேவை உரிமை மற்றும் பதவி உயர்வு வாய்ப்பு ஆகியவை சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.
3 ஆண்டுகள் அவகாசம்
இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில அரசுகள், ஆசிரியர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் 29-05-2026 அன்று விசாரித்து, முந்தைய தீர்ப்பை அடிப்படையில் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், ஆசிரியர்கள் TET தகுதி பெறுவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக நீட்டித்து, புதிய காலக்கெடுவை 31-08-2028 என நிர்ணயித்துள்ளது.
மேலும், மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுமார் ஆறு மாத இடைவெளியில், ஆண்டுக்கு இருமுறை TET தேர்வுகளை நடத்த முயற்சிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு கோரிக்கை ஏற்கப்படாது என்றும் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக கடந்த ஜூலை 4, 5 மற்றும் 6 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. தகுதி தேர்வு பாடத்திட்டத்தின்படி கேட்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தாலும் தாள் ஒன்றில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான வினா பகுதிகள் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் தாள் இரண்டில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் பகிர்வு 70% ஆகும் இருந்ததை உணர முடிகிறது. பணியில் சேரும்போதே உரிய கல்வித் தகுதியும் புலமையும் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு இது பெரிய மன உளைச்சலையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே வரும் காலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் சார்ந்த பாடத்தில் அதிக வினாத்தாள் வினாக்கள் கேட்கும்படி வினாத்தாள் வடிவமைப்பு மாற்ற வேண்டும்.
- அரசாணை எண் 23 நாள்-ன்படி என்பது பொதுப் பிரிவினர் தவிர அனைத்து பிரிவினருக்கும் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் 90 ஆக உள்ளது. ஆசிரியர்களின் வயது, அனுபவம், கல்வித்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் மேலும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.
சிறப்பு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்
- ஆசிரியர்களுடைய பணி அனுபவம் உயர் கல்வித் தகுதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
- பாடத்திட்டத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாடத்தில் Major கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
- சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகிறபோது ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு வழங்கிட வேண்டும்.
தகுதித் தேர்வில் இருந்து விலக்கு
- கேரளா அரசு விதிவிலக்கு அளித்தது போல NET/ SET/ M.Phil/ Phd முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























