மேலும் அறிய

AICTE Academic Calendar: மாணவர்களே... அக்.30 வரை கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேரலாம்; ஏஐசிடிஇ திருத்தப்பட்ட அட்டவணை இதோ!

மாணவர்கள் நாடு முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர அக்டோபர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் சார்பில் திருத்தப்பட்ட அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி மாணவர்கள் நாடு முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர அக்டோபர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தலைமை வழிகாட்டு மையம்

அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொழில்நுட்பப் படிப்புகளாகக் கருதப்படும் பொறியியல், டிப்ளமோ படிப்புகளை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கட்டுப்படுத்தி வருகிறது. தேசிய அளவில் தலைமை வழிகாட்டு மையமாகச் செயல்படும் ஏஐசிடிஇ 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

ஏஐசிடிஇ ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்லூரிகள் உருவாக்கம், மூடல், கல்லூரிகள் திறப்பு, கட்டணம் திருப்பி அளிப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகள் உள்ளிட்ட கல்லூரி சார்ந்த செயல்பாடுகளுக்கான தேதிகளை, வருடாந்திர கால அட்டவணையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டது. இதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி கடைசித் தேதி ஆக இருந்தது. 

இதையும் வாசிக்கலாம்: NAS Exam: நவ.3-ல் மாநில திறனறித் தேர்வு; தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் 11 கோடி மாணவர்கள் பங்கேற்பு

அக்டோபர் 30ம் தேதி கடைசி

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 30 கடைசித் தேதியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தகுதியுள்ள மாணவர்களைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் 30ம் தேதி வரை தங்களின் கல்லூரியில் சேர்த்துகொள்ள வேண்டும். 

அதேபோல  ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்க அக்டோபர் 30 ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். லேட்டரல் என்ட்ரி மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சேரவும் அக்டோபர் 30 ஆம் தேதி கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விவரங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் முழு விவரங்களை https://aicte-india.org/sites/default/files/Revised%20Academic%20Calendar_2023-24_16102023.jpg என்ற இணைப்பில் காணலாம்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் இணைய முகவரி: aicte-india.org

இதையும் வாசிக்கலாம்:  APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Embed widget