மேலும் அறிய

மதிப்பெண் திருப்தி இல்லையா...சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

" மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் நிலைமை சீரடைந்தவுடன் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார். 

பொதுத் தேர்வுகள் மற்றும் வரவிருக்கும் போட்டித் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக மத்திய கல்வி அமைச்சர் உரையாடுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் இந்த காணொலி உரையாடல் ரத்து செய்யப்பட்டு, கல்வி அமைச்சர் பேசும் ஆடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டது.  

அந்த ஆடியோவில், "கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப பெற்று வருவதாகும், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாட முடியவில்லை" என்றும் தெரிவித்தார். கொரோனா காரணமாக மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு சிபிஎஸ்ஈ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். 


மதிப்பெண் திருப்தி இல்லையா...சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

மேலும்,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டுக்கான விரிவான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அவர், " மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்காக ஆகஸ்டில் நிலைமை சீரடைந்தவுடன் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.

முன்னதாக, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.  புதிய மதிப்பீட்டு முறையின் கீழ், 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பும் வழங்கப்பட இருக்கிறது. 

இருப்பினும், நேற்றைய ஆடியோ பதிவில் வரவிருக்கும் பொது நுழைவுத்  தேர்வுகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.  நாடு முழுவதும்  பிப்ரவரி, மார்ச்  ஆகிய இரண்டு கட்டங்களுக்கு 2021 ஜேஇஇ (மெயின்) தேர்வு நடைபெற்ற நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் ஏப்ரல் மற்றும் மே கட்டங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த இரண்டு கட்டங்களுக்கான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.   

ஜேஇஇ தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் தங்களது 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது குறிப்பிட்ட பள்ளி வாரியங்கள் நடத்தும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 20 சதவீதங்களுக்குள் மதிப்பெண் பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, சிபிஎஸ்இ புதிய மதிப்பீட்டு முறையில் திருப்தியடையாத பல மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத முன்னைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.            


மதிப்பெண் திருப்தி இல்லையா...சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

மேலும், நாடு முழுவதும் 2021 நீட் தேர்வு நடத்துவது குறித்த அறிவுப்புகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நீட் தேர்வை ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த தேசியத் தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. எனினும், நீட் தேர்வு நடத்தப்படுமா? எப்பொழுது நடக்கும்? என்ற நிச்சயமற்ற சூழலில் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget