மேலும் அறிய

Model Schools Admission: நுழைவுத் தேர்வு அடிப்படையில் அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - குண்டைத் தூக்கிப் போட்ட கல்வித்துறை

அரசு மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

9ஆம் வகுப்பு முடித்து 10ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்புவார்கள். அவ்வாறு முயற்சி செய்யும் மாணவர்களுக்கு, கல்வித்துறையின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
Model Schools Admission: நுழைவுத் தேர்வு அடிப்படையில் அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - குண்டைத் தூக்கிப் போட்ட கல்வித்துறை

கல்வித்துறை அறிவிப்பு,

  • 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும். 
  • மாவட்டத்துக்கு 240 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 120 பேர் மாணவர்களும் 120 மாணவிகளும் என தேர்வு செய்யப்படுவர்.
  • இவர்களுக்கு தேர்வு மார்ச் மாதம் 4ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி 12.00 மணிக்கு முடிவடையும்.
  • ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் இருந்து நுழைவுத் தேர்வு எழுத தகுதியான மாணவர்களை தேர்வு செய்து பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.  
  • தேர்வு மையத்தின் தலைவராக மூத்த தலைமை ஆசிரியரும் தேர்வு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 
  • தேர்வு நடக்கும் இடத்திற்கு தேர்வு எழுதும் மாணவர்களை அழைத்து வரும் முழுப்பொறுப்பும் பள்ளித் தலைமை ஆசிரியர்களையே சேரும். 
  • எனவே, இதற்கென தனி ஆசிரியரை நியமித்து, அவர்கள் தேர்வர்களை அழைத்து வருவதையும், தேர்வு முடிந்து பின்னர் அழைத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும். 
  • மேலும்,  இந்த தேர்வு OMR தாளில் விடைகளை குறிக்கும் முறையில் நடைபெறும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி OMR  விடைத் தாள்கள் வழங்கப்படும். அதேபோல், விடைத்தாள்கள் EMIS-ல் பதிவு செய்யப்பட்ட பெயருடன் தான் இருக்கும்.  
  • எனவே, தேர்வு எழுதும் தேர்வர்கள் பள்ளி பெயரிடப்பட்டு சீல் வைக்கப்பட்ட EMIS அடையாள அட்டையும், புகைப்படமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • EMIS அடையாள அட்டை மாணவர்களிடம் உள்ளதா என பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்த பின்னர்,  அவர்களை நுழைவுத் தேர்வுக்கு அனுப்ப வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்து செயல்படுபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget