மேலும் அறிய

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை.. 3 பேரை சினிமா ஸ்டைலில் ஏமாற்றிய பெண்.. தீவிரமாக தேடும் போலீசார்..

சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேரை ஏமாற்றிய மோசடி பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேரை ஏமாற்றிய மோசடி பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் உருவாக்கி பண மோசடி, கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனிடையே சேலத்தை அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

சேலம் மாவட்டம் எம்செட்டிபட்டிப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரசிதா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அழகுக்கலை நிபுணரான ரசிதா தனது பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமல் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு தொடர்ந்து மூர்த்தி லைக் போட்டு வந்துள்ளார். இதனைக் கண்ட ரசிதா மூர்த்திக்கு தொடர்ந்து மெசெஜ் அனுப்பி பேசியுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் பேசிய அவர், தான் கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது பேச்சில் மயங்கி இரக்கம் காட்டிய மூர்த்தி, தான் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்ற விவரத்தை தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே மாதிரியான கருத்துடன் உள்ளோம். திருமணம் செய்துகொண்டால் என்ன என ரசிதா, கூற இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். 

பின்னர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்த ரசிதா மாயமானார். அப்போது வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகையும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி ரசிதாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் மூர்த்தி ரசிதாவின் அக்கா மகனை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், ரசிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், மூர்த்தியை ஏமாற்றிய விஷயத்தை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரசிதா ஏற்கனவே ஊட்டியில் 2 பேரை திருமணம் செய்த நிலையில், 3வதாக மூர்த்தியையும் ஏமாற்றியதாக தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கோவையில் ஆண் நண்பருடன் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் ரசிதாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget