மேலும் அறிய

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை.. 3 பேரை சினிமா ஸ்டைலில் ஏமாற்றிய பெண்.. தீவிரமாக தேடும் போலீசார்..

சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேரை ஏமாற்றிய மோசடி பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேரை ஏமாற்றிய மோசடி பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் உருவாக்கி பண மோசடி, கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனிடையே சேலத்தை அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

சேலம் மாவட்டம் எம்செட்டிபட்டிப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரசிதா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அழகுக்கலை நிபுணரான ரசிதா தனது பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமல் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு தொடர்ந்து மூர்த்தி லைக் போட்டு வந்துள்ளார். இதனைக் கண்ட ரசிதா மூர்த்திக்கு தொடர்ந்து மெசெஜ் அனுப்பி பேசியுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் பேசிய அவர், தான் கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது பேச்சில் மயங்கி இரக்கம் காட்டிய மூர்த்தி, தான் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்ற விவரத்தை தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே மாதிரியான கருத்துடன் உள்ளோம். திருமணம் செய்துகொண்டால் என்ன என ரசிதா, கூற இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். 

பின்னர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்த ரசிதா மாயமானார். அப்போது வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகையும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி ரசிதாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் மூர்த்தி ரசிதாவின் அக்கா மகனை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், ரசிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், மூர்த்தியை ஏமாற்றிய விஷயத்தை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரசிதா ஏற்கனவே ஊட்டியில் 2 பேரை திருமணம் செய்த நிலையில், 3வதாக மூர்த்தியையும் ஏமாற்றியதாக தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கோவையில் ஆண் நண்பருடன் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் ரசிதாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?
Trump Iran War: “ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
“ஒரு நைட் போதும், மொத்த ஈரானும் க்ளோஸ்.!''; ட்ரம்ப் இறுதி வார்னிங்; இன்று இரவு என்ன நடக்குமோ.?!
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Mohan G: கர்மா சும்மா விடுமா? - உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Seeman: காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? - சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Embed widget