மேலும் அறிய

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!

தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி காலை பொதுமக்கள் சிலர் பார்த்த போது ஜெயபால் ரத்த வெள்ளத்தில் பைப் கம்பெனி வாசலில் இறந்து கிடந்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக இன்று தஞ்சாவூரில் பைப் கம்பெனி வாசலில் மது அருந்து இடம் தராத ஆத்திரத்தில் காவலாளியை அடித்து கொலை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
தஞ்சாவூர் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால்(74). இவர் தலைவாபாளையம் அருகே தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி காலை பொதுமக்கள் சிலர் பார்த்த போது ஜெயபால் ரத்த வெள்ளத்தில் பைப் கம்பெனி வாசலில் இறந்து கிடந்துள்ளார்.  இது குறித்து அம்மாப்பேட்டை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபால் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயபால் கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய தொடங்கினர்.
 
இதற்கிடையில், குற்றப்பிரிவு  உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் ஜெயபாலை இரண்டு நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளான வாளமர்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (37),  தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்த குமார் (50), நர்த்தங்குடிகாட்டை சேர்ந்த விஜயகுமார்(39), கரைமீண்டார்கோட்டையை சேர்ந்த ஜெகதீசன்(34) ஆகிய 4 பேரையும், நேற்று இரவு மாரியம்மன்கோவில் பகுதியில் நின்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 18 -ம் தேதி இரவு, மது அருந்த அந்த பைப் கம்பெனி வாசலுக்கு சென்ற போது ஜெயபால் தடுத்து நிறுத்தினார், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லை துாக்கி தலையில் போட்டு கொலை செய்து விட்டு, திருட்டுக்காக கொலை  நடந்தது போல் அனைவரையும் நம்ப வைக்க, அவரது மொபைல் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்றதாக காவல்துறையினரிடம் கொலை செய்த நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை வழக்காக காவல்துறையினர் தற்பொழுது மாற்றியுள்ளனர் மேலும் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்களுக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
பிளாட்பார்ம் டிக்கெட் கேட்ட பெண் TTR - யை கன்னத்தில் அறைந்த சட்டக் கல்லூரி மாணவி
பிளாட்பார்ம் டிக்கெட் கேட்ட பெண் TTR - யை கன்னத்தில் அறைந்த சட்டக் கல்லூரி மாணவி
எங்க அம்மாவையா ஆபாசமா திட்டுற? நள்ளிரவில் ஓனருக்கு நேர்ந்த கொடூரம்! ஸ்ரீபெரும்புதூரில் பகீர்!
எங்க அம்மாவையா ஆபாசமா திட்டுற? நள்ளிரவில் ஓனருக்கு நேர்ந்த கொடூரம்! ஸ்ரீபெரும்புதூரில் பகீர்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Tata Sierra Discount: செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
Embed widget