மேலும் அறிய

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!

தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி காலை பொதுமக்கள் சிலர் பார்த்த போது ஜெயபால் ரத்த வெள்ளத்தில் பைப் கம்பெனி வாசலில் இறந்து கிடந்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக இன்று தஞ்சாவூரில் பைப் கம்பெனி வாசலில் மது அருந்து இடம் தராத ஆத்திரத்தில் காவலாளியை அடித்து கொலை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
தஞ்சாவூர் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால்(74). இவர் தலைவாபாளையம் அருகே தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி காலை பொதுமக்கள் சிலர் பார்த்த போது ஜெயபால் ரத்த வெள்ளத்தில் பைப் கம்பெனி வாசலில் இறந்து கிடந்துள்ளார்.  இது குறித்து அம்மாப்பேட்டை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபால் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயபால் கொலை செய்யப்பட்டு இருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய தொடங்கினர்.
 
இதற்கிடையில், குற்றப்பிரிவு  உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் ஜெயபாலை இரண்டு நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளான வாளமர்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (37),  தஞ்சாவூர் வண்டிக்கார தெருவை சேர்ந்த குமார் (50), நர்த்தங்குடிகாட்டை சேர்ந்த விஜயகுமார்(39), கரைமீண்டார்கோட்டையை சேர்ந்த ஜெகதீசன்(34) ஆகிய 4 பேரையும், நேற்று இரவு மாரியம்மன்கோவில் பகுதியில் நின்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
வாசலில் மது அருந்துவதை தடுத்த காவலாளி; தலையில் கல்லைப் போட்டு கொலை!
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 18 -ம் தேதி இரவு, மது அருந்த அந்த பைப் கம்பெனி வாசலுக்கு சென்ற போது ஜெயபால் தடுத்து நிறுத்தினார், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லை துாக்கி தலையில் போட்டு கொலை செய்து விட்டு, திருட்டுக்காக கொலை  நடந்தது போல் அனைவரையும் நம்ப வைக்க, அவரது மொபைல் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்றதாக காவல்துறையினரிடம் கொலை செய்த நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை வழக்காக காவல்துறையினர் தற்பொழுது மாற்றியுள்ளனர் மேலும் இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட 4 நபர்களுக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget