மேலும் அறிய

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பாமல் ரூ.85 லட்சம் கையாடல்; உதவி மேலாளர் கைது - சிக்கியது எப்படி?

விழுப்புரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல் - உதவி மேலாளர் கைது

ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல்

விழுப்புரம்: ஏடிஎம்-ல் பணம் நிரப்பாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவ்வங்கியில் உதவி மேலாளராக ஆந்திரா மாநிலம் நெல்லூரை அடுத்த கொலமூடி கிராமம் எருக்குலபாலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரகு (வயது 33) என்பவர் கடந்த 11.7.2022 முதல் பணியாற்றி வருகிறார். அவருக்கு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைக்கும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரகு, ஏ.டி.எம். எந்திரங்களில் தொகையை சரிவர நிரப்பாமல் ஒவ்வொரு முறையும் சிறுக, சிறுக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார். அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததோடு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் சோதனை செய்தனர்.

ரூ.85¼ லட்சம் கையாடல்

இதில் உதவி மேலாளர் ரகு, ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு அவருக்குரிய ஒருமுறை கடவுச்சொல்லையும், மற்றும் மற்றொரு அதிகாரியான மார்டினின் கடவுச்சொல்லையும் ரகுவே பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தினுள் முழு பணத்தையும் நிரப்பாமல் சிறுக, சிறுக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 500 அளவிற்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வங்கியின் தலைமை அதிகாரி விசாரணை செய்ததில் பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.

மேலும் மாதம் ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டிய தனியார் நிறுவனமும் சரியான முறையில் தணிக்கை செய்யாமல் கையாடல் தகவல்களை வங்கி கிளைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

உதவி மேலாளர் கைது

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி மேலாளரான ரகு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி பகுதியில் தங்கியிருந்த ரகுவை விழுப்புரம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget