மேலும் அறிய

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பாமல் ரூ.85 லட்சம் கையாடல்; உதவி மேலாளர் கைது - சிக்கியது எப்படி?

விழுப்புரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல் - உதவி மேலாளர் கைது

ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல்

விழுப்புரம்: ஏடிஎம்-ல் பணம் நிரப்பாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவ்வங்கியில் உதவி மேலாளராக ஆந்திரா மாநிலம் நெல்லூரை அடுத்த கொலமூடி கிராமம் எருக்குலபாலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரகு (வயது 33) என்பவர் கடந்த 11.7.2022 முதல் பணியாற்றி வருகிறார். அவருக்கு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைக்கும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரகு, ஏ.டி.எம். எந்திரங்களில் தொகையை சரிவர நிரப்பாமல் ஒவ்வொரு முறையும் சிறுக, சிறுக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார். அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததோடு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் சோதனை செய்தனர்.

ரூ.85¼ லட்சம் கையாடல்

இதில் உதவி மேலாளர் ரகு, ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு அவருக்குரிய ஒருமுறை கடவுச்சொல்லையும், மற்றும் மற்றொரு அதிகாரியான மார்டினின் கடவுச்சொல்லையும் ரகுவே பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தினுள் முழு பணத்தையும் நிரப்பாமல் சிறுக, சிறுக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 500 அளவிற்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வங்கியின் தலைமை அதிகாரி விசாரணை செய்ததில் பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.

மேலும் மாதம் ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டிய தனியார் நிறுவனமும் சரியான முறையில் தணிக்கை செய்யாமல் கையாடல் தகவல்களை வங்கி கிளைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

உதவி மேலாளர் கைது

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி மேலாளரான ரகு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி பகுதியில் தங்கியிருந்த ரகுவை விழுப்புரம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget