மேலும் அறிய

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பாமல் ரூ.85 லட்சம் கையாடல்; உதவி மேலாளர் கைது - சிக்கியது எப்படி?

விழுப்புரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல் - உதவி மேலாளர் கைது

ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல்

விழுப்புரம்: ஏடிஎம்-ல் பணம் நிரப்பாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவ்வங்கியில் உதவி மேலாளராக ஆந்திரா மாநிலம் நெல்லூரை அடுத்த கொலமூடி கிராமம் எருக்குலபாலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரகு (வயது 33) என்பவர் கடந்த 11.7.2022 முதல் பணியாற்றி வருகிறார். அவருக்கு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைக்கும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரகு, ஏ.டி.எம். எந்திரங்களில் தொகையை சரிவர நிரப்பாமல் ஒவ்வொரு முறையும் சிறுக, சிறுக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார். அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததோடு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் சோதனை செய்தனர்.

ரூ.85¼ லட்சம் கையாடல்

இதில் உதவி மேலாளர் ரகு, ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு அவருக்குரிய ஒருமுறை கடவுச்சொல்லையும், மற்றும் மற்றொரு அதிகாரியான மார்டினின் கடவுச்சொல்லையும் ரகுவே பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தினுள் முழு பணத்தையும் நிரப்பாமல் சிறுக, சிறுக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 500 அளவிற்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வங்கியின் தலைமை அதிகாரி விசாரணை செய்ததில் பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.

மேலும் மாதம் ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டிய தனியார் நிறுவனமும் சரியான முறையில் தணிக்கை செய்யாமல் கையாடல் தகவல்களை வங்கி கிளைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

உதவி மேலாளர் கைது

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி மேலாளரான ரகு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி பகுதியில் தங்கியிருந்த ரகுவை விழுப்புரம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget