மேலும் அறிய

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பாமல் ரூ.85 லட்சம் கையாடல்; உதவி மேலாளர் கைது - சிக்கியது எப்படி?

விழுப்புரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல் - உதவி மேலாளர் கைது

ஏடிஎம் எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.85¼ லட்சம் கையாடல்

விழுப்புரம்: ஏடிஎம்-ல் பணம் நிரப்பாமல் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக ஜெயபாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவ்வங்கியில் உதவி மேலாளராக ஆந்திரா மாநிலம் நெல்லூரை அடுத்த கொலமூடி கிராமம் எருக்குலபாலம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரகு (வயது 33) என்பவர் கடந்த 11.7.2022 முதல் பணியாற்றி வருகிறார். அவருக்கு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைக்கும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரகு, ஏ.டி.எம். எந்திரங்களில் தொகையை சரிவர நிரப்பாமல் ஒவ்வொரு முறையும் சிறுக, சிறுக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார். அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்ததோடு ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் சோதனை செய்தனர்.

ரூ.85¼ லட்சம் கையாடல்

இதில் உதவி மேலாளர் ரகு, ஏ.டி.எம். எந்திரத்தை திறப்பதற்கு அவருக்குரிய ஒருமுறை கடவுச்சொல்லையும், மற்றும் மற்றொரு அதிகாரியான மார்டினின் கடவுச்சொல்லையும் ரகுவே பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தினுள் முழு பணத்தையும் நிரப்பாமல் சிறுக, சிறுக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 500 அளவிற்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் வங்கியின் தலைமை அதிகாரி விசாரணை செய்ததில் பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.

மேலும் மாதம் ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டிய தனியார் நிறுவனமும் சரியான முறையில் தணிக்கை செய்யாமல் கையாடல் தகவல்களை வங்கி கிளைக்கு தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

உதவி மேலாளர் கைது

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி மேலாளரான ரகு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சென்னை ஆவடி பகுதியில் தங்கியிருந்த ரகுவை விழுப்புரம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
Embed widget