மேலும் அறிய

உக்கி போடவைத்து, தரையை நாவால் சுத்தம்செய்யுமாறு திணிப்பு.. தலித் மக்களுக்கு நடந்த வன்கொடுமை கொடூரம்

பீகாரின் அவுரங்காபாத் நகரில் இரண்டு தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம் அம்பலமாகியுள்ளது.

சாதியின் கோர முகத்தைக் காட்ட நம் நாட்டில் அன்றாடம் ஏதேனும் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில் பீகாரின் அவுரங்காபாத் நகரில் இரண்டு தலித்துகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம் அம்பலமாகியுள்ளது.

பீகாரில் உள்ளது அவுரங்காபாத் மாவட்டம். இங்கு அண்மையில் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் தனக்கு வாக்களித்த தலித் இளைஞர்கள் மீது கொடூரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்தத் தேர்தலில் தோற்றுப்போன ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வந்த் சிங் சிங்கானா. இவரும் இவரது கூட்டாளிகளும் அணில் குமார், மஞ்சித் குமார் என்ற இரண்டு இளைஞர்களைப் பிடித்து வந்தனர். அவர்களை தோப்புக்கரணம் போடச் செய்தனர். பின்னர் தரையில் துப்பி அதை அவர்கள் நாவால் சுத்தம் செய்யச் செய்தனர். இதனை வீடியோவாக எடுத்து பரவச் செய்துள்ளனர்.

இந்த வீடியோவின் அடிப்படையில் பல்வந்த் சிங் சிங்கானாவை கைது செய்துள்ளது போலீஸ். இதனை அவுரங்காபாத் மாவட்ட எஸ்.பி. கந்தேஷ் குமார் மிஸ்ரா உறுதிப்படுத்தினார். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கந்தேஷ் குமார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி2னோம். அணில் குமார், மன்ஜித் குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வந்த் சிங் என்ற ஒருவரை கைது செய்துள்ளோம். பல்வந்த் சிங் மீது விரைவில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட பல்வந்த் சிங், அந்த இருவரும் குடிபோதையில் தன்னுடன் தகராறு செய்ததாகவும். இதற்கு முன்னரும் பலமுறை இது போன்றே நடந்து கொண்டிருந்ததாகவும் கூறினார். அந்த இரு இளைஞர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் அடங்கிய வீடியோ காண்போர் மனதை அதிர்ச்சியில் உறையவைப்பதாக உள்ளது. ஒவ்வொரு முறை தலித்துகளுக்கு எதிரான இவ்வாறான வன்முறைகளோ, பாலியல் பலாத்கார சம்பவங்களோ நடைபெறும் போதும் அது ஒரு சில நாட்களில் நீர்த்துப் போகிறது.

அமெரிக்காவில் கருப்பு இன இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது உலகமே நீதி கோரியது. கறுப்பின மக்களின் வாழ்க்கையும் முக்கியம் என்ற கோஷங்கள் உரக்க ஒலித்தது. ஆனால், இங்கே உள்ளூரிலே நம் கண் முன்னே நிகழும் கொடூரங்கள் நமக்கு பெரிதாகத் தெரிவதில்லை. ஒவ்வொரு முறைய இத்தகைய அநீதி நிகழும் போதும் தலித்துகளின் வாழ்க்கையும் முக்கியம் என்ற ஒருமித்த உணர்வு மேலோங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதியின் வன்மத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு அநீதிகளுக்கு குரல் கொடுத்து, அநியாயம் செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.அப்போதுதான் இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget