மேலும் அறிய

Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

திருவள்ளூரில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது பெரியகுப்பம். இந்த பகுதியில் உள்ள கம்பர் தெருவில் உள்ள வீட்டில் ஜோதீஸ்வரன் – அமுதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலே இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. துர்நாற்றம் கடுமையாக வீசியதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அழுகிய நிலையில் இருந்த சடலம் அமுதா என்று கண்டறியப்பட்டது.


Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. அதாவது, அந்த வீட்டில் வசித்து வந்த ஜோதீஸ்வரனும், அமுதாவும் தம்பதிகளே அல்ல என்றும், இருவரும் கள்ளக்காதலர்கள் என்றும் தெரியவந்தது.

மேலும் படிக்க : "டெம்போலாம் வெச்சி கடத்திருக்கோம்”...பிஸ்தா பாணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்.. இரண்டு பேர் கைது

அமுதா திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது கணவர் பாபு என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. 36 வயதான பாபுவிற்கும், 30 வயதான அமுதாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர்.


Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

அமுதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பாபு மனைவி அமுதாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் பாபுவின் பேச்சைக் கேட்காமல் ஜோதீஸ்வரனுடனான பழக்கத்தை தொடர்ந்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் பாபு மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு ஜோதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், இருவரும் பெரியகுப்பத்தில் உள்ள கம்பர் தெருவில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில்தான், அமுதா வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்து மூன்று நாட்கள் இருந்திருக்கும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில், அமுதாவுடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரன் தற்போது மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த அமுதா ஏற்கனவே இரு முறை ஜோதீஸ்வரனுடன் வீட்டைவிட்டு வெளியேறியதும், பின்னர் கணவனுடன் வந்து வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பூட்டிய வீட்டிற்குள் இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்!

மேலும் படிக்க : சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்பு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget