மேலும் அறிய

Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

திருவள்ளூரில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது பெரியகுப்பம். இந்த பகுதியில் உள்ள கம்பர் தெருவில் உள்ள வீட்டில் ஜோதீஸ்வரன் – அமுதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலே இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. துர்நாற்றம் கடுமையாக வீசியதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அழுகிய நிலையில் இருந்த சடலம் அமுதா என்று கண்டறியப்பட்டது.


Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. அதாவது, அந்த வீட்டில் வசித்து வந்த ஜோதீஸ்வரனும், அமுதாவும் தம்பதிகளே அல்ல என்றும், இருவரும் கள்ளக்காதலர்கள் என்றும் தெரியவந்தது.

மேலும் படிக்க : "டெம்போலாம் வெச்சி கடத்திருக்கோம்”...பிஸ்தா பாணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்.. இரண்டு பேர் கைது

அமுதா திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய எருமைவெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது கணவர் பாபு என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. 36 வயதான பாபுவிற்கும், 30 வயதான அமுதாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர்.


Crime : கணவனை விட்டு காதலனுடன் வசித்த இளம்பெண்! பூட்டிய வீட்டிற்குள் அழுகிய சடலம் - நடந்தது என்ன?

அமுதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பாபு மனைவி அமுதாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் பாபுவின் பேச்சைக் கேட்காமல் ஜோதீஸ்வரனுடனான பழக்கத்தை தொடர்ந்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் பாபு மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு ஜோதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், இருவரும் பெரியகுப்பத்தில் உள்ள கம்பர் தெருவில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில்தான், அமுதா வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்து மூன்று நாட்கள் இருந்திருக்கும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில், அமுதாவுடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரன் தற்போது மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த அமுதா ஏற்கனவே இரு முறை ஜோதீஸ்வரனுடன் வீட்டைவிட்டு வெளியேறியதும், பின்னர் கணவனுடன் வந்து வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பூட்டிய வீட்டிற்குள் இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : கொடுத்த பணத்துக்கு ஒருமுறைதான்! டேட்டிங் செயலியில் சேர்ந்த மாடல் அழகி! பிரச்னை செய்த பேராசிரியர்!

மேலும் படிக்க : சினிமாவை போல் நடந்த சண்டை...வாய்த் தகராறில் ஆரம்பித்த பிரச்னை; கலவரமாக மாறியது எப்படி..? தேனியில் பரபரப்பு

 

தலைப்பு செய்திகள்

காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget