மேலும் அறிய

இடப்பிரச்சினையில் விவசாயி அடித்து கொலை: தஞ்சாவூர் அருகே பரபரப்பு

கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவ்விரு நிலங்களுக்கு இடையே நில அளவை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இடப்பிரச்சனையில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நேற்று வியாழக்கிழமை இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஒரத்தநாடு வட்டம் சில்லத்தூர் பகுதி சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ராஜேந்திரன் (65) இவருக்கும் அதே ஊரைச்  சேர்ந்த இவரது உறவினரான ஆர்.ரவிச்சந்திரன் (45) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இடப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருதரப்பினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவ்விரு நிலங்களுக்கு இடையே நில அளவை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேலும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு எட்டு மணி அளவில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினரான மதியழகன் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனிடம் இடப் பிரச்சினை தொடர்பாக கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது

தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பினர் மத்தியிலும் தள்ளுமுள்ளு நடந்துள்ளது. இதில் ரவிச்சந்திரன் மற்றும் மதியழகன் இருவரும் சேர்ந்து கட்டையால் சரமாரியாக தாக்கியதில் ராஜேந்திரன் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜேந்திரனை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராஜேந்திரனே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராஜேந்திரனை அடித்து கொன்ற அவரது உறவினர்  ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கத்திக்குத்து வழக்கில் 20  ஆண்டுகள் சிறை தண்டனை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). இவர் கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தநிலையில், கடந்த 28.07.2019 அன்று பெருமாள் வீட்டின் வழியாக ராஜேந்திரன் சென்று கொண்டிருந்தபோது அவரை பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்க முயற்சி செய்தார். அப்போது உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராஜேந்திரன் கட்டையை பிடுங்கி தூர வீசிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் தான் மறைத்து வைத்து எடுத்துவந்த கத்தியை கொண்டு ராஜேந்திரனின் வயிற்றில் குத்தியுள்ளார்.

மேலும் இதனை தடுக்க வந்த ராஜேந்திரனின் மகன் தினேஷ் (24) வயிற்றிலும் பெருமாள் கத்தியால் குத்தியுள்ளார். இதில் தினேஷ் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் இதுதொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, தகாத வார்த்தையால் திட்டியதற்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 250/- ரூபாய் அபராதமும், இருவரையும் கத்தியால் குத்தியதற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து  பெருமாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget