மேலும் அறிய

கொலைக்கு காரணமான புது ஸ்கூட்டர்.! தம்பியைக் கொலை செய்த அண்ணன்: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற புலிப்பாண்டி. புலிப்பாண்டிக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள். இவர்களில் மூத்த மகன் முனியசாமிக்கு 51 வயதாகிறது. அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புலிப்பாண்டியின் 2வது மகன் செல்லத்துரை (50). இவர் திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். 3வது மகன் முருகன் (45) திருமணம் முடித்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

புலிப்பாண்டியின் மகள்கள் கற்பகம் (40), பாக்கியலட்சுமி (38) ஆகியோர் திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மூத்த மகனான முனுசாமிக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் சொத்துகளை மற்ற இரண்டு மகன்களுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார் புலிப்பாண்டி.

இதன் காரணமாக குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது.  

இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி புலிப்பாண்டியின் கடைசி மகன் முருகன் தான் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தனது தந்தையிடம் காண்பிக்க தெற்கு பொம்மையாபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்.

ஸ்கூட்டரை தந்தை மற்றும் சகோதரனிடம் காண்பித்து விட்டு இரவு நேரமாகி விட்டதால் தனது தந்தையின் வீட்டில் தனது மூத்த சகோதரர் முனியசாமியுடனேயே தங்கியுள்ளார். அவரது தந்தை மற்றொரு அறையில் தூங்கியுள்ளனார்.

இந்நிலையில் நள்ளிரவில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த தனது தம்பி முருகனை, முனியசாமி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டிப் படுகொலை செய்தார்.

கொலை செய்துவிட்டு குளித்து நல்ல உடை உடுத்திக் கொண்டு, பசுவந்தனை காவல் நிலையத்திற்குச் சென்று முனியசாமி சரண் அடைந்து, தனது தம்பியை வெட்டி கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.  


கொலைக்கு காரணமான புது ஸ்கூட்டர்.! தம்பியைக் கொலை செய்த அண்ணன்: தூத்துக்குடியில் பரபரப்பு

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், மணியாச்சி டிஎஸ்பி. சங்கருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் படுகொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  முனியசாமியை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் தனக்கு தந்தை சொத்து தராமல் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்தார். தம்பி முருகன் ஸ்கூட்டர் வாங்கி வந்து தந்தையிடம் காண்பித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு எதுவும் தராமல் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தது தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.  

தம்பி முருகனிடம் கேட்டபோதும், உனக்கு தான் குடும்பம் எதுவும் இல்லை உனக்கு சொத்து எல்லாம் எதுக்கு என்று கூறியதால் ஆத்திரத்தில் இருந்தேன். நேற்று முருகன் தனியாக இருந்ததால் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக முனியசாமி கூறினார்.

மேலும் தனது தம்பியை கொலை செய்து விட்டு, குளித்து விட்டு ஹாயாக சென்று முனியசாமி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள முனியசாமியிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget