மேலும் அறிய

Crime: பழிக்கு பழியாக வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்

புதுச்சேரியில் வெடிகுண்டுகள் வீசி அரிவாளால் வெட்டி ரவுடி கொலையான சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்கு பழியாக இக்கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் வெடிகுண்டுகள் வீசி அரிவாளால் வெட்டி ரவுடி கொலையான சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (24). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்களான சக்தி (20), தினேஷ்குமார் (21) ஆகியோருடன் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களில் அங்கு ஒரு கும்பல் வந்து இறங்கியது. மிகவும் குறுகிய பகுதியில் இருந்த பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர்களை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.


Crime: பழிக்கு பழியாக வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்

இதன்பின் வெட்டுக்காயங்களுடன் கிடந்த பன்னீர்செல்வம், சக்தி, தினேஷ்குமார் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பன்னீர்செல்வம் இறந்து போனார். அவரது நண்பர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ரவுடி பன்னீர்செல்வம் கொலையான தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மூலக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஜாண்டி என்ற செந்தில்நாதன் (26) கும்பலுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் யார் பெரியவர்? என்பது குறித்து முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.


Crime: பழிக்கு பழியாக வெடிகுண்டுகள் வீசி ரவுடி வெட்டி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்

இதுமட்டுமின்றி ஜாண்டியின் ஆதரவாளரான சண்முகாபுரம் ராம் நகரை சேர்ந்த ஜெயபால் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதால் பன்னீர்செல்வத்தை தீர்த்துக்கட்ட ஜாண்டி முடிவு செய்தார். இதுதொடர்பாக அடிக்கடி மோதிக்கொண்ட நிலையில், சமீபத்தில் ஜாண்டி கோஷ்டியை சேர்ந்த வைஷாக் என்பவரை பன்னீர்செல்வம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குப்பழியாக பன்னீர்செல்வத்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதை நிறைவேற்ற அவரது அன்றாட நடவடிக்கைகளை ஜாண்டி கோஷ்டியினர் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்து ஜாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி பன்னீர்செல்வத்தை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியது அம்பலமானது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ஜாண்டி என்ற செந்தில்நாதன், தீவனூரை சேர்ந்த பரத் (25), கிளியனூரை சேர்ந்த அஜித் (30), பாரதிபுரத்தை சேர்ந்த கனகராஜ் (24), பூத்துறையை சேர்ந்த மற்றொரு பரத் (24), காமராஜ் நகரை சேர்ந்த விமல்ராஜ் (25), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த வைசாக் (26) ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
Embed widget