மேலும் அறிய

கிண்டி: சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சூதாட்ட கிளப்பில் போலீசார் கட்டி புரண்டு மோதல்

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பால முருகன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர முயற்சி செய்துள்ளனர்

சென்னை கிண்டி இரயில் நிலையத்தையொட்டி நடந்து வரும் சூதாட்ட கிளப்பில் காவல் துறையினர் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்த சூதாட்ட கிளப்பில் 40 வயதான பாலமுருகன் என்ற காவல் துறையைச் சேர்ந்தவர், நேற்று முன்தினம் இந்த கிளப்பிற்கு வந்துள்ளார். தொடர்ந்து விளையாடி தோற்று வந்தவர், மொபைல் போன் வைத்து விளையாடியுள்ளார். அதிலும் தோல்வி அடைந்துள்ளார். 

அதனை அடுத்து, மொபைல் போனை வாங்கி கொண்ட எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மொபைல் போனை திருப்பி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் பால முருகன். ஆனால், எதிர் தரப்பினர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பால முருகன் அருகில் இருந்தவரிடம் இருந்து போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மேலும், இங்கு சூதாட்டம் நடப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார். இங்கு சட்டவிரோதமாக கிளப் நடந்து வருவதாகவும், கிளப்பை பூட்டி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மது போதையில் இருந்த பால முருகன், இப்படி செய்ததால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பால முருகன் மது போதையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பால முருகன், காவல் துறையினரிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். அவர்களை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், காவல் துறையினருக்கும் பால முருகனுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. 

வாய் வாக்குவாதம் கைகலப்பாக மாற, காவல் துறையினரும் பால முருகனும் கட்டிப் புரண்டு சண்டைப்போட்டுள்ளனர். இதனால், மேலும் 3 காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை கூட்டிச் சென்றுள்ளனர். அதனை அடுத்து, சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கிளப்பிற்கு சீல் வைத்து பூட்டியுள்ளனர். மேலும், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினருக்குள் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் படிக்க: World Homeopathy Day 2022: இன்று உலக ஹோமியோபதி தினம்! வரலாறு? காரணம்? நோக்கம்? தேவை?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget