மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மயிலாடுதுறை பகுதிக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று பேர் சிசிடிவி காட்சிகளின் உதவி கொண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த திவாஸ், ரகுமான் என்ற 2 இளைஞர்கள் தீபாவளியன்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு ஸ்ப்ளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கருவி முக்கூட்டு என்ற பகுதியில் அடையாளம் தெரியாத கார் மோதி விபத்திற்குள்ளாகினர். கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு,  திவாஸ் மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையிலும், ரகுமான் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

இதுகுறித்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட செம்பனார்கோயில் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரினை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து ஏற்பட்ட இடத்தில் சேதமடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய பைக்கும் காணாமல் போனதால், என்னடா இது நமக்கு வந்து சோதனை? பைக் இல்லாமல் விபத்து வழக்குப்பதிவு செய்யமுடியாமல் போலீசார் தவித்தனர். 


மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

இதையடுத்து, மீண்டும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, விபத்தில் சேதமடைந்த பைக்கினை அன்று மாலை 5 மணியளவில் 3 இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் டோப் செய்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. (விபத்தில் சேதமடைந்த பைக்கில் ஒருவர் அமர்ந்து கொள்ள, மேலும், இரண்டு இளைஞர்கள் பல்சர் பைக்கில் அமர்ந்து ஓட்டியவாறு உதைத்துச் தள்ளிச் சென்றுள்ளனர்). 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மயிலாடுதுறை பகுதிக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

Tata IPO: முதல் நாளே 140% சதவீதம் லாபம்..ஜாக்பாட் கொடுத்த டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் - விவரம்!


மயிலாடுதுறை அருகே விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

இந்த சிசிடிவி பதிவுகளை கையில் வைத்துக்கொண்டு கடந்த 15 நாட்களுக்கு மேலாக பைக் திருடர்களை தேடி வந்த செம்பனார்கோவில் போலீசார் 15 நாட்களுக்குப் பிறகு, வாகனத்தை திருடிச்சென்றது மயிலாடுதுறை அருவாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ் என்பதையும், அவருக்கு துணையாக பைக்கை எடுத்துச் செல்ல உதவியாக இருந்தது மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்த 25 வயதான நவீன்குமார், சோழசக்கரநல்லூர் உளுத்துக்குப்பை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அசோக் என்பதையும் ஒருவழியாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

Minister Ponmudi: மீண்டும் விசாரணை வளையத்தில் அமைச்சர் பொன்முடி! ஒருமணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை அதிரடி

இதனை அடுத்து, திருட்டுக்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, அந்த 3 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற செம்பனார்கோவில் காவல்துறையினர், திருட்டு வழக்கு பதிவு செய்து பொறையாறு கிளைச் சிறையில் அடைத்தனர். காணாமல் போன இருசக்கர வாகனம் மீண்டும் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒருவழியாக விபத்து குறித்து 15 நாட்களுக்குப் பிறகு நேற்று வழக்குப்பதிவு செய்துள்ள செம்பனார்கோவில் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற காரை மீண்டும் தேடத் தொடங்கியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Embed widget