மேலும் அறிய
தினமும் ரசம் வைத்ததால் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணன்
சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் தாயை இழந்த இரு குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது

#abpnadu #madurai #Court
— Arunchinna (@iamarunchinna) December 24, 2021
சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு - தாயை இழந்த இரு குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை.
மதுரை மாநகர்பகுதிக்கு உட்பட்ட கீரைத்துறையை சேர்ந்த கண்ணன் - சிவஞான செல்வி தம்பதியர். இவர்களது குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடித்துவிட்டு வரும் எனக்கு காரசாரமாக தான் குழம்பு வைக்கவேண்டும், என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த 2016- ஆம் ஆண்டு மதிய உணவிற்கு தினசரியும் ரசம் வைத்து தருவதாக கூறி தனது மனைவி சிவஞான செல்வியுடன் தலைக்கு ஏறிய மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இது தொடர்பாக கீரைத்துறை காவல்- துறையினர் கணவர் கண்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் மதுரை மாவட்ட 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் கண்ணன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதாக கூறி மனைவியை கொலை செய்த கணவன் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion