மேலும் அறிய

மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

கும்பகோணத்தில் தாயை வீட்டை விட்டு கணவன் போகச்சொன்னதால் மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடசந்தூர். இங்கு வசித்து வருபவர் அன்பழகன். இவருக்கு வயது 50. இவரது மனைவி ராணி. இவருக்கு வயது 38. அன்பழகன் – ராணி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கல்லூரி செல்கிறார். மற்றொரு மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். அன்பழகன் – ராணி தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் அருகே அமைந்துள்ள தேப்பெருமாநல்லூரில் வசித்து வருகின்றனர்.

அன்பழகனுடைய வீட்டில் அன்பழகன் குடும்பத்தினருடன் அவரது மாமியார், அதாவது ராணியின் தாய் மீனாட்சி ( அவருக்கு வயது 65) வசித்து வந்துள்ளார். மாமியார் தங்களுடனே இருப்பது அன்பழகனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மீனாட்சியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மனைவி ராணியிடம் அன்பழகன் பல முறை கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.



மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினமும் கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அன்பழகன் தொழில் விவகாரமாக வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ராணியும், மீனாட்சியும் இந்த விவகாரத்தால் மிகவும் மனமுடைந்துள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் தாயும், மகளும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

பின்னர். வீட்டின் மாடிக்கு சென்ற தாயும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அன்பழகனிடமும் போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

தாயும், மகளும் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பைனான்சியரின் மகனும், மகளும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget