மேலும் அறிய

Kallakurichi: மீண்டும் ஜெய்பீம் சம்பவம்: கள்ளக்குறிச்சியில் பட்டியலின மக்கள் மீது கொடூர போலீஸ் தாக்குதல்!

என்னை சுவர் பக்கம் திரும்பி நிற்க சொன்னார்கள். நாற்காலியில் ஏற்றி நிற்கவைத்து பிரகாஷ் மற்றும் தர்மராஜின் இரண்டு கட்டை விரல்களையும் தூண்களில் கட்டிவிட்டி அப்படியே இறக்கிவிட்டார்கள் - செல்வம்

ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பழங்குடி இன மக்கள் மீது காவல் துறையின் அதிகாரம் எப்படி அத்துமீறி செலுத்தப்படுகிறது என்பதை அப்பட்டமாக மக்கள் முன் வைத்தது. 

இந்தப் படத்தை பார்த்த பின் எளியவர்கள் மீதான காவல் துறையின் வெறியாட்டத்திலும், அதிகாரவர்க்கத்தின் செயல்பாட்டிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சிறு நகர்வுகூட இதுவரை தென்படவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்ன சேலத்தில் இருக்கும் தில்லை நகரில் வசிப்பவர்கள் பிரகாஷ்(25), தர்மராஜ் (35), பெரியசாமி(55), செல்வம்(55). இவர்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

 

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது இரவு 11.45 மணியளவில் 10க்கும் மேற்பட்ட சீருடை அணியாத சிறப்புப் படை காவல் துறையினர் இவர்களை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

எங்கு அழைத்து செல்கிறோம், எது தொடர்பான விசாரணை என எதுவும் அவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்காத காவல் துறையினர் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் இதுவரை கூறவில்லை.  பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி தனது மூன்று குழந்தைகளுடன் கணவனை மீட்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் மட்டுமின்றி இவர்களுடைய உறவினர்களான பரமசிவத்தையும், சக்திவேலையும் நேற்று காலை 15க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

விஷயம் வெளியில் கசிய ஆரம்பித்ததும் பரமசிவத்தையும், செல்வத்தையும் மட்டும் காவல் துறையினர் விடுவித்துள்ளனர். அதேசமயம் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் மீது தலா 13 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க காவல் துறையினர் மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

காவல் துறையினரின் அராஜகம் குறித்து விடுவிக்கப்பட்ட செல்வம் பேசுவதை கேட்கையில் பதைபதைக்க வைக்கிறது. அவர் பேசியதாவது, “நானும் எனது மனைவியும் அந்த சாலையில் வியாபாரத்திற்காக மட்டும்தான் சென்று வந்திருக்கிறோம். 

என்னை சுவர் பக்கம் திரும்பி நிற்க சொன்னார்கள். நாற்காலியில் ஏற்றி நிற்கவைத்து பிரகாஷ் மற்றும் தர்மராஜின் இரண்டு கட்டை விரல்களையும் தூண்களில் கட்டிவிட்டி அப்படியே இறக்கிவிட்டார்கள். அவர்கள் கத்திய கதறல் இன்னமும் கேட்கிறது. இதை சொல்லும்போதே உயிர் போய்விடுகிறது” என காவல் துறையினர் செய்த பல அராஜகங்களை அச்சம் விலகாமல் பேசுகிறார்.

எத்தனை ஜெய் பீம்கள் வந்தாலும் எவ்வளவு போராட்டங்கள் நடந்தாலும் காவல் துறையின் அடாவடித்தனம் சற்றும் குறையப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவம் மிக சமீபத்திய உதாரணம். மேலும் எளிய மக்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்துவிடும் இதுபோன்ற அராஜகத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Embed widget