மேலும் அறிய

Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!

குடும்ப பிரச்னை காரணமாக அந்தோணி ராபின் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவரது மனைவி அம்மு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சியில் கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள க.மாமனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராபி. இவர் தனியார் கேஸ் கம்பெனி ஒன்றில் ஓட்டுநராக பணியாறி வருகிறார். அவருக்கு அம்மு என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதனிடைடே கடந்த மார்ச் 8ம் தேதி அந்தோணி ராபின் உடல் முழுக்க தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப பிரச்னை காரணமாக அந்தோணி ராபின் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவரது மனைவி அம்மு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்கொலை பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. ஆனால் அந்தோணி ராபினின் தாய் தனக்கு மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மருமகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி உறவினர்களுடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து சேலத்தில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அம்முவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆரம்பத்தில் கம்பெனி பைக்கை வீட்டுக்கு எடுத்து வரும் அந்தோணி ராபினிடம் இருந்து அவரது நண்பர் ஒருவர் இரவில் பைக்கை பெற்றுச் செல்வார். இதனால் கம்பெனியில் கணக்கு காட்ட பாட்டிலில் முன்கூட்டியே பெட்ரோல் வாங்கி வைத்திருப்பார். இல்லாவிட்டால் பாட்டிலில் பைக்கில் உள்ள பெட்ரோலை எடுத்து விட்டு நண்பரை நிரப்ப சொல்லுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அந்தோணி ராபின் தன் மீது ஊற்றி தீ வைத்தார். தான் கதவை திறந்து போவதற்குள் இப்படி நடந்து விட்டது என அம்மு தெரிவித்திருந்தார். 

ஆனால் அவர்கள் வீட்டு அருகே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மதுபோதையில் வீட்டை விட்டு வெளியே வரும் அந்தோணி ராபின் மீது அம்மு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் இடம் பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை அம்மு ஒப்புக் கொண்டார்.

சென்னை கூடுவாஞ்சேரியில் காய்கறி கடை வைத்திருந்த அந்தோணி ரபைனை அதே கடையில் வேலை செய்த அம்மு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு க.மாமனேந்தல் கிராமத்தில் வந்து குடும்பத்தோடு குடியேறியுள்ளனர். அந்தோணி அங்குள்ள சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே அம்மு நடத்தை மீது அந்தோணி ராபினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 8ம் தேதி இரவு மதுபோதையில் வந்த கணவர் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி அம்மு தீ வைத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்முவை போலீசார் கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget