மேலும் அறிய

Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!

குடும்ப பிரச்னை காரணமாக அந்தோணி ராபின் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவரது மனைவி அம்மு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சியில் கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள க.மாமனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராபி. இவர் தனியார் கேஸ் கம்பெனி ஒன்றில் ஓட்டுநராக பணியாறி வருகிறார். அவருக்கு அம்மு என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதனிடைடே கடந்த மார்ச் 8ம் தேதி அந்தோணி ராபின் உடல் முழுக்க தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது குடும்ப பிரச்னை காரணமாக அந்தோணி ராபின் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவரது மனைவி அம்மு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்கொலை பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. ஆனால் அந்தோணி ராபினின் தாய் தனக்கு மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக மருமகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி உறவினர்களுடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து சேலத்தில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அம்முவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆரம்பத்தில் கம்பெனி பைக்கை வீட்டுக்கு எடுத்து வரும் அந்தோணி ராபினிடம் இருந்து அவரது நண்பர் ஒருவர் இரவில் பைக்கை பெற்றுச் செல்வார். இதனால் கம்பெனியில் கணக்கு காட்ட பாட்டிலில் முன்கூட்டியே பெட்ரோல் வாங்கி வைத்திருப்பார். இல்லாவிட்டால் பாட்டிலில் பைக்கில் உள்ள பெட்ரோலை எடுத்து விட்டு நண்பரை நிரப்ப சொல்லுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அந்தோணி ராபின் தன் மீது ஊற்றி தீ வைத்தார். தான் கதவை திறந்து போவதற்குள் இப்படி நடந்து விட்டது என அம்மு தெரிவித்திருந்தார். 

ஆனால் அவர்கள் வீட்டு அருகே சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மதுபோதையில் வீட்டை விட்டு வெளியே வரும் அந்தோணி ராபின் மீது அம்மு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் இடம் பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை அம்மு ஒப்புக் கொண்டார்.

சென்னை கூடுவாஞ்சேரியில் காய்கறி கடை வைத்திருந்த அந்தோணி ரபைனை அதே கடையில் வேலை செய்த அம்மு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு க.மாமனேந்தல் கிராமத்தில் வந்து குடும்பத்தோடு குடியேறியுள்ளனர். அந்தோணி அங்குள்ள சிலிண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே அம்மு நடத்தை மீது அந்தோணி ராபினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 8ம் தேதி இரவு மதுபோதையில் வந்த கணவர் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி அம்மு தீ வைத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்முவை போலீசார் கைது செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பூட்டிய வீட்டிற்கு ஸ்கெட்ச் போடும் கும்பல்! உத்திரமேரூர் போலீஸ் தீவிர விசாரணை! கொதிக்கும் பொதுமக்கள்!
பூட்டிய வீட்டிற்கு ஸ்கெட்ச் போடும் கும்பல்! உத்திரமேரூர் போலீஸ் தீவிர விசாரணை! கொதிக்கும் பொதுமக்கள்!
" திருமணம் ஆனாலும் பரவாயில்லை என் கூட வந்துடு " அறை எண் 109 - ல் நடந்தது என்ன ?
குல தெய்வ கோயிலில் சாமி கும்பிட வந்த குடும்பத்தினரிடம் நகை கொள்ளை... நான்கு பேருக்கு வெட்டு !
குல தெய்வ கோயிலில் சாமி கும்பிட வந்த குடும்பத்தினரிடம் நகை கொள்ளை... நான்கு பேருக்கு வெட்டு !
ஆவாரம்பாளையத்தில் பகல் நேரத்தில் துணிச்சல்.. கார் கண்ணாடி உடைத்த மர்ம நபர்
ஆவாரம்பாளையத்தில் பகல் நேரத்தில் துணிச்சல்.. கார் கண்ணாடி உடைத்த மர்ம நபர்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
Eps Alert : ”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
TN WEATHER ALERT : கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரம்னா என்ன? எப்போது தொடங்குகிறது? என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரம்னா என்ன? எப்போது தொடங்குகிறது? என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Best Mileage Bikes: ரஃப் ஆன சாலைகளிலும் ராஜா; அதிக மைலேஜ்; குறைந்த விலை- டாப் பைக்குகள் லிஸ்ட்!
Best Mileage Bikes: ரஃப் ஆன சாலைகளிலும் ராஜா; அதிக மைலேஜ்; குறைந்த விலை- டாப் பைக்குகள் லிஸ்ட்!
அதிமுக ஆட்சி அமைக்க தவறினால் தலைமை மாற்றம் உறுதி.! அடித்து சொல்லும் மாஜி எம்.பி
அதிமுக ஆட்சி அமைக்க தவறினால் தலைமை மாற்றம் உறுதி.! அடித்து சொல்லும் மாஜி எம்.பி
Kavitha TRS: BRS-க்கு ஷாக் கொடுத்த கவிதா; TRS என்ற புதிய கட்சியை தொடங்கி அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ் மகள்
BRS-க்கு ஷாக் கொடுத்த கவிதா; TRS என்ற புதிய கட்சியை தொடங்கி அதிரடி காட்டிய சந்திரசேகர ராவ் மகள்
TN Election 2026 ECI: அடேங்கப்பா..! தமிழகத்தில் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்
TN Election 2026 ECI: அடேங்கப்பா..! தமிழகத்தில் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்
Embed widget