மேலும் அறிய

Crime: மனைவி மீது சந்தேகம்.. தொடர்ச்சியாக டார்ச்சர்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில்  தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகங்கள் குற்றச் செயல் வரை சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்று உள்ளது. அதில் அழகாக இருக்கும் மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கணவர் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியின் ரைன் பகுதியில் பெட்ரிக்(27) என்ற நபர் தன்னுடைய மனைவி ஜெனிஃபர்(27) உடன் வசித்து வந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் பெட்ரிக் தன்னுடைய மனைவி ஜெனிஃபரை கத்தியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போதும் இவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று மனைவி ஜெனிஃபர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. 


Crime: மனைவி மீது சந்தேகம்.. தொடர்ச்சியாக டார்ச்சர்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது

இதன் காரணமாக காவல்துறையினர் இவரை எச்சரித்து விட்டுள்ளனர். எனினும் அதன்பின்பும் மனைவி ஜெனிஃபர் மீது இவருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. அத்துடன் அவருடன் தொடர்ந்து சண்டை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி பெட்ரிக் தன்னுடைய மனைவியுடன் நடைபெற்ற சண்டையில் அவரை கொலை செய்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய மனைவியை தேடி வந்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு ஒரு புகாரும் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய மனைவி மாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்று திரும்பிய போது காணவில்லை என்று கூறியுள்ளார். 

அவர் அளித்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் புதர்களிலிருந்து அவருடைய மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்த போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கணவர் பெட்ரிக் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நான் மனைவியை கொலை செய்யவில்லை என்று முதலில் பெட்ரிக் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

அதன்பின்னர் காவல்துறையினர் அவருடைய மனைவியின் மொபைல் போனை ஆய்வு செய்துள்ளனர். அந்த சமயத்தில் பெட்ரிக்கின் மனைவி கொலை செய்யப்பட்ட நேரத்திற்கு பிறகு தன்னுடைய சகோதரிக்கு ஜெனிஃபர் குறுஞ்செய்தி அனுப்பியது போல் பெட்ரிக் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதைவைத்து காவல்துறையினர் பெட்ரிக் இடம் விசாரணை நடத்திய போது அவர் கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெட்ரிக் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget