மேலும் அறிய

Masthan Murder Case: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த மஸ்தான் தஸ்தகீர் அதிமுகவில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக  இருந்தார். இதன்பின் அக்கட்சியில் விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

இதனிடையே சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது  நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்,உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் புகாரளித்தார். 

இதனையடுத்து இயற்கைக்கு மாறான மர்ணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.அன்றைய தினம் மஸ்தானுடன் காரில் சென்ற அவரது மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் மஸ்தானிடம் வாங்கிய ரூ.15 லட்சம் கடனுக்காக உறவினர் தமீம் என்கிற சுல்தான் அஹமது, நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோரோடு இணைந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. 

முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அவரது உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த நிலையில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக மஸ்தான் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார்  உயிரிழந்த மஸ்தானின் சகோதரர் இம்ரான்பாஷாவை கைது செய்தனர். இதனையடுத்து இம்ரான்பாஷா உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இம்ரான்பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே மஸ்தானுக்கும், அவர் சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவுக்கு சொத்து காரணமாக முன்விரோதம் இருந்ததும், மஸ்தான் கொலையில் அவருக்கும் பங்கு இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து கௌஷே ஆதம்பாஷாவை விசாரித்ததில், மஸ்தான் கொலையில் தொடர்பு இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget