மேலும் அறிய

Masthan Murder Case: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த மஸ்தான் தஸ்தகீர் அதிமுகவில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக  இருந்தார். இதன்பின் அக்கட்சியில் விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

இதனிடையே சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது  நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்,உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் புகாரளித்தார். 

இதனையடுத்து இயற்கைக்கு மாறான மர்ணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.அன்றைய தினம் மஸ்தானுடன் காரில் சென்ற அவரது மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் மஸ்தானிடம் வாங்கிய ரூ.15 லட்சம் கடனுக்காக உறவினர் தமீம் என்கிற சுல்தான் அஹமது, நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோரோடு இணைந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. 

முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அவரது உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த நிலையில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக மஸ்தான் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார்  உயிரிழந்த மஸ்தானின் சகோதரர் இம்ரான்பாஷாவை கைது செய்தனர். இதனையடுத்து இம்ரான்பாஷா உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இம்ரான்பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே மஸ்தானுக்கும், அவர் சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவுக்கு சொத்து காரணமாக முன்விரோதம் இருந்ததும், மஸ்தான் கொலையில் அவருக்கும் பங்கு இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து கௌஷே ஆதம்பாஷாவை விசாரித்ததில், மஸ்தான் கொலையில் தொடர்பு இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget