மேலும் அறிய

Masthan Murder Case: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த மஸ்தான் தஸ்தகீர் அதிமுகவில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக  இருந்தார். இதன்பின் அக்கட்சியில் விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

இதனிடையே சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது  நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்,உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் புகாரளித்தார். 

இதனையடுத்து இயற்கைக்கு மாறான மர்ணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.அன்றைய தினம் மஸ்தானுடன் காரில் சென்ற அவரது மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் மஸ்தானிடம் வாங்கிய ரூ.15 லட்சம் கடனுக்காக உறவினர் தமீம் என்கிற சுல்தான் அஹமது, நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோரோடு இணைந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. 

முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அவரது உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த நிலையில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக மஸ்தான் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார்  உயிரிழந்த மஸ்தானின் சகோதரர் இம்ரான்பாஷாவை கைது செய்தனர். இதனையடுத்து இம்ரான்பாஷா உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இம்ரான்பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே மஸ்தானுக்கும், அவர் சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவுக்கு சொத்து காரணமாக முன்விரோதம் இருந்ததும், மஸ்தான் கொலையில் அவருக்கும் பங்கு இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து கௌஷே ஆதம்பாஷாவை விசாரித்ததில், மஸ்தான் கொலையில் தொடர்பு இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget