மேலும் அறிய

விருத்தாச்சலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக 2 பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார் - விருத்தாச்சலத்தில் நடந்த சோக சம்பவம்.

விருத்தாச்சலத்தில் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சினை காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன், மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றி விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சகீராபானு என்பவருடன் திருமணமாகி 10 வயதில் பெண் பிள்ளையும், 7 வயதில் ஆண் பிள்ளை என இருவர் உள்ளனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் எஜமான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கி உள்ளார். குறிப்பாக கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தால் இருவரும் வீட்டில் தனித்தனியாக இருந்ததாக காவல்துறை விசாரணையில் கூறுகின்றனர். அதன்படி வீட்டின் அறையில் மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு பிள்ளைகளுடன் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். இதனிடையே காலை பிள்ளைகள் இருவரும் பள்ளி செல்ல வேண்டியிருந்த நிலையில், வெகு நேரமாகியும், அறையின் கதவு திறக்காததால் வீட்டின் அருகாமையில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து கணவர் குமார் உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அப்போது மனைவி, மகள் மற்றும் மகன் மூவரும் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் காவல்துறையினர் மூன்று பேர் உடல்களையும் மீட்டனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்டமாக கொண்டு சென்றனர். பின்னர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் உடற் கூராய்வு பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கணவர் குமாரிடம் விருத்தாசலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, "முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சகீராபானுக்கு இடையே, கடந்த ஆறு மாதமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் இதில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை. மேலும் அவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் சாப்பிடுவதில்லை. தனியாக சாப்பிட்டு கொள்வார். மனைவி மற்றும் பிள்ளைகள் தனியாக சாப்பிட்டு வந்துள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினை காரணமாக ஒன்றாக உறங்காமல். மனைவி பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்குவார். கணவர் குமார் வீட்டில் உள்ள இருக்கும் ஹாலில் உறங்கி வந்துள்ளார். இந்த சூழலில் அண்மையில் கணவர் மனைவி இருவருக்கும் பிரச்சினை இருந்தே வந்துள்ளது. இதனால் மனமுடைந்த குமாரின் மனைவி ஷகீரா பானு, தனது மகன் மகளின் கொன்றுவிட்டு, அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்கொண்டு கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget