மேலும் அறிய

செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டை அருகே உள்ள வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்ககுமார். இவருடைய மனைவி ராஜகுமாரி(53). இவர் நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் முட்டை லோடு ஏற்றி வருவதற்காக லாரி உரிமையாளரும், டிரைவருமான வெங்கம்பாக்கம் துலுக்காணம் கோயில் தெருவை சேர்ந்த தட்சணா மூர்த்தியின் மகன், உதய குமார் (35) என்பவரிடம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து அனுப்பி உள்ளார். இதையடுத்து உதயகுமார் சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி லேபையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது 4 பேர் அடங்கிய மர்ம கும்பல், தன்னைத் தாக்கிவிட்டு, 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக ராஜகுமாரிக்கு தொலைபேசி மூலம் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

இது குறித்து ராஜகுமாரி அருகிலுள்ள வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது வழக்கறிஞர் மூலம் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கணேசன், ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வினோத்ராஜ் ஆகியோர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

விசாரணையில், உதயகுமார் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்ததாவும், கடந்த 6 மாதங்களாக வறுமையில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால், முட்டை வாங்க கொடுத்த பணத்தை அபேஸ் செய்வதற்காக அந்த பணத்தை மறைத்து வைக்க அவரது நண்பர்களான வெங்கம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக், சேகர் ஆகியோரிடம் பணத்தை பிரித்து கொடுத்துள்ளதும், பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதாக நாடகமாடியதும் தெரியவந்தது.  போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை செய்து பணத்தை கைப்பற்றினர், இதையடுத்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் காவல் நிலையம் வந்து விசாரணை செய்து ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை ராஜ குமாரியிடம் ஒப்படைத்தார். பணத்தை தானே மறைத்து வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நாடக மாடிய உதயகுமார் மீது ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திய போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget