மேலும் அறிய

செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டை அருகே உள்ள வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்ககுமார். இவருடைய மனைவி ராஜகுமாரி(53). இவர் நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் முட்டை லோடு ஏற்றி வருவதற்காக லாரி உரிமையாளரும், டிரைவருமான வெங்கம்பாக்கம் துலுக்காணம் கோயில் தெருவை சேர்ந்த தட்சணா மூர்த்தியின் மகன், உதய குமார் (35) என்பவரிடம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து அனுப்பி உள்ளார். இதையடுத்து உதயகுமார் சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி லேபையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது 4 பேர் அடங்கிய மர்ம கும்பல், தன்னைத் தாக்கிவிட்டு, 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றதாக ராஜகுமாரிக்கு தொலைபேசி மூலம் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

இது குறித்து ராஜகுமாரி அருகிலுள்ள வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது வழக்கறிஞர் மூலம் ரோசணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கணேசன், ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், வினோத்ராஜ் ஆகியோர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

விசாரணையில், உதயகுமார் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்ததாவும், கடந்த 6 மாதங்களாக வறுமையில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால், முட்டை வாங்க கொடுத்த பணத்தை அபேஸ் செய்வதற்காக அந்த பணத்தை மறைத்து வைக்க அவரது நண்பர்களான வெங்கம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக், சேகர் ஆகியோரிடம் பணத்தை பிரித்து கொடுத்துள்ளதும், பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி பணத்தை பறித்துச் சென்றதாக நாடகமாடியதும் தெரியவந்தது.  போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை செய்து பணத்தை கைப்பற்றினர், இதையடுத்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் காவல் நிலையம் வந்து விசாரணை செய்து ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை ராஜ குமாரியிடம் ஒப்படைத்தார். பணத்தை தானே மறைத்து வைத்துக் கொண்டு மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நாடக மாடிய உதயகுமார் மீது ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திய போலீசாரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.


செங்கல்பட்டு : கொள்ளைபோனதாக நாடகமாடி ரூ.7 லட்சத்தை அபேஸ் செய்த லாரி டிரைவர் கைது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget