மேலும் அறிய

பழனியில் கேரள தம்பதி தற்கொலை; கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

கடன் தொல்லையால் பழனி வந்த கேரள தம்பதியினர் தனியார் விடுதியில் அறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்தவர் ராமன்ரகு (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (46). கடந்த 22ஆம் தேதி இரவு 2 பேரும், பழனிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராமன்ரகு, உஷா தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆளுநரிடம் இபிஎஸ் புகார் மனுக்களை அளித்திருப்பது நாடகம்... விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
பழனியில் கேரள தம்பதி தற்கொலை; கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விடுதி அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராமன்ரகு, உஷா ஆகிய 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Stalin : தமிழகம் முழுவதும் சாலைகள் செம்மையா இருக்கனும்; ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
பழனியில் கேரள தம்பதி தற்கொலை; கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

பின்னர் அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கு உஷா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில்,  தாங்கள் சொந்த ஊரில் கடன் தொல்லையால் மனஉளைச்சலில் இருந்து வந்தோம். மேலும் ஊரில் 7 குடும்பத்தினர் எங்களை வேண்டுமென்ற ஒரு வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். எனவே அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். எங்களது 13 வயது மகன், 9 வயது மகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று உஷா எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமை தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை அழிக்கிறீர்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
பழனியில் கேரள தம்பதி தற்கொலை; கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கும் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்

மேலும் விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது, நண்பகல் 12 மணி அளவில் ராமன்ரகு-உஷா தம்பதியை பார்த்ததாகவும், அதன்பிறகு அவர்களை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் 12 மணிக்கு பிறகு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கேரளாவில் உள்ள ராமன்ரகுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தபிறகே தம்பதி தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் கூறினர். தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு.. ஆட்களை கூட்டி வந்து சிறுவனை கொலை செய்த நண்பன்!
கிரிக்கெட் விளையாட்டில் தகராறு.. ஆட்களை கூட்டி வந்து சிறுவனை கொலை செய்த நண்பன்!
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் அடித்துக்கொலை.. சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு!
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் அடித்துக்கொலை.. சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு!
" இது தப்பு இல்ல கிட்ட வா " ஆதார் அட்டை நகல் எடுக்க சென்ற சிறுமி !! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் !! திருநங்கை செய்த வெறிச் செயல் !! சிக்கியது எப்படி ?
உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் !! திருநங்கை செய்த வெறிச் செயல் !! சிக்கியது எப்படி ?
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Gold and silver rate : தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
USS Gerald Warship Issue: அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
Embed widget