மேலும் அறிய

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு.. ஆட்களை கூட்டி வந்து சிறுவனை கொலை செய்த நண்பன்!

உள்ளூர் பூங்கா ஒன்றில் திங்கட்கிழமை சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு சிறுவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டு பேரும் கைக்கலப்பில் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பொதுவாக எந்த விதமான போட்டிகள் என்றாலும் அதில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதேபோல் களத்தில் ஏற்படும் மோதல்களும் போட்டியை மேலும் மெருகூட்டும் வகையில் பரபரப்பாக அமையும். ஆனால் சமீபகாலமாக விளையாட்டில் ஏற்படும் மோதல்கள் வன்முறைக்கான இடமாக மாறியுள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் மேற்கு டெல்லியின் திலக் நகரில் தான் நடைபெற்றுள்ளது. அங்குள்ள உள்ளூர் பூங்கா ஒன்றில் திங்கட்கிழமை சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது இரு சிறுவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரண்டு பேரும் கைக்கலப்பில் இறங்கியுள்ளனர். இதில் அடி வாங்கிய சிறுவன் நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த தன் உறவுக்கார பையனை அழைத்து வந்துள்ளான். 3 பேரும் சேர்ந்து எதிர்தரப்பில் சண்டை போட்ட சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இரவு 7.20 மணியளவில் இந்த சண்டை வெடித்துள்ளது. இதில் 3 பேரும் அடித்ததில் எதிர் தரப்பு சிறுவன் கழுத்து மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தான். 

அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் 3 சிறார் மீதும் திலக் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த சிறுவன் பெயர் நிஷாந்த் என்றும், அவனின் தந்தை அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், நிஷாந்துக்கு 2 சகோதர்களும் உள்ளனர்.

சம்பவம் நடந்த உடனே அடி வாங்கிய சிறுவன் 2 பேரை அழைத்துக் கொண்டு நிஷாந்தை தேடி அவனின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவனின் தாய் ஜோதி என்னவென்று விசாரித்த நிலையில், சிறிது நேரத்தில் 3 பேரும் நிஷாந்தை அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று சண்டைப் போட்டத்தை தட்டிக் கேட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே நிஷாந்த்  மூச்சு பேச்சின்றி கிடப்பதாக வீட்டுக்கு தகவல் வந்துள்ளது. 

நாங்கள் ஏதோ சிறுவர்கள் சண்டை என பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் விளையாட்டுக்கு மோதிக் கொண்டார்கள் என நினைத்து சத்தம் போட்டோம். இப்படி செய்யக்கூடாது என தாய் ஜோதி தெரிவித்துள்ளார். அதேசமயம் நிஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற தாங்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், எங்கள் தரப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் தாக்கியதாகவும் நிஷாந்த் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget