மேலும் அறிய

புது மாப்பிள்ளை ஆக இருந்தவர் உயிரிழப்பு! முடி மாற்று அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்? - 4 பேர் கைது!

டெல்லியில் திருமணத்திற்காக முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் திருமணத்திற்காக முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் 30 வயதான அதர் ரசீத் என்ற நபர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு தலைமுறை ஜீன் படி தலையில் வழுக்கை விழுந்துள்ளது. இதையடுத்து,  கடந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ரசீத், தன்னை அழகாக மாற்ற நினைத்தார். அதன்படி, கடந்த ஆண்டு தன் தலைமுடியை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். 

இந்தநிலையில், மாற்று அறுவை சிகிச்சை பெற்ற சில நாட்களிலேயே ரசீத்துக்கு உடலளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது தலை மற்றும் முகம் வீக்கமடைந்ததாகவும், சிறுநீரங்கள் செயல்படாமல் ஆகியும், மற்ற அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து உயிரிழந்தார். 

இதையடுத்து, தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுநீரங்கள் செயலிழந்து உயிரிழந்ததாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2 மருத்துவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ரஷீத்தின் தாயார் ஆசியா பேகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ ரஷீத் தான் எங்கள் குடும்பத்திற்கு ஒரே ஆதரவு. அவரது உழைப்பில்தான் சொந்தமாக வீடு கட்டி, அவரது இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள தனியார் கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த சிகிச்சைக்குபிறகு, அவரது தலையில் பயங்கரமான வீக்கம் ஏற்பட்டு வேதனையை அனுபவித்தார். என் மகன் மிகவும் வேதனையான மரணத்தில் இறந்தான். சிகிச்சைக்கு பிறகு அவனுடைய சிறுநீரகங்கள் செயல்படாமல் போய்விட்டது. அவனுடைய மற்ற உறுப்புகளுக்கு செயல்படவில்லை. நான் ஒவ்வொரு நாளும் என் மகனை நினைவில் வைத்துக் கொண்டு மெதுவாக இறக்கிறேன். நான் என் மகனை இழந்தேன், ஆனால் ஒரு சிலரின் மோசடி நடவடிக்கைகளால் வேறு எந்த தாயும் தங்கள் குழந்தையை இழக்க விரும்பவில்லை” என தெரிவித்தார். 

மேலும், மகன் இறப்பதற்கு முன்பாக வீங்கிய முகத்துடன் இருந்த புகைப்படத்தையும் அவரது தாயார் காண்பித்தார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget