மேலும் அறிய

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!

’’அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்’’

கடலூர் மாவட்டம் ஆனைக்குப்பம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75) ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஆவார். இவருடைய மனைவி சரஸ்வதி, ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி. இவர்களுக்கு ஆனந்தசெந்தில், கார்த்திக், கணேஷ் ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் கார்த்திக், கணேஷ் இரட்டை சகோதரர்கள். சுப்பிரமணியனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர்களது மகள் அமெரிக்காவிலும், ஆனந்தசெந்தில் பெங்களூருவிலும், கணேஷ் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
இந்நிலையில் மற்றொரு மகன் கார்த்திக் (32) மட்டும் தனது தந்தையுடன் மீனாட்சிநகரில் வசித்து வந்தனர். திருமணமாகாத கார்த்திக் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியனுக்கும், கார்த்திக்குக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது தந்தை சுப்பிரமணியனை இரும்பு குழாயால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார் .இந்த நிலையில் சுப்பிரமணியன் கத்தும் சத்ததினை காலை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர், பின்னர் கார்த்திக் பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனை அருகே சென்று ஒரு ஆம்புலன்ஸ் ஒட்டுனரிடம் தனது தந்தை இறநதுவிட்டார் அவரை வைக்க ஒரு பிரீசர் பேட்டி வேண்டும் என்று கேட்டு ஓட்டுநரை அழைத்து சென்றுள்ளார் ஆனால் வீட்டில் கார்த்திக்கின் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, துணை-ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலில், அவரது கை, கால், என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அவரது அறையையும் காவல் துறையினர் சோதனை செய்த பொழுது அவரது அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது மன நிலை சீராக உள்ளதா எனவும் விசாரிக்க உள்ளனர், மேலும் வீட்டில் காலி சிகரெட் அட்டைகளும் குவியல், குவியலாக கிடந்தன. 

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திக் மதுவுக்கு அடிமையானதும், தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தந்தை சுப்பிரமணியனிடம் தகராறு செய்து வந்ததும், இந்நிலையில் நேற்று குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், தந்தை என்றும் பாராமல் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையையே அடித்து கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget