மேலும் அறிய

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!

’’அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்’’

கடலூர் மாவட்டம் ஆனைக்குப்பம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75) ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஆவார். இவருடைய மனைவி சரஸ்வதி, ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி. இவர்களுக்கு ஆனந்தசெந்தில், கார்த்திக், கணேஷ் ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் கார்த்திக், கணேஷ் இரட்டை சகோதரர்கள். சுப்பிரமணியனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர்களது மகள் அமெரிக்காவிலும், ஆனந்தசெந்தில் பெங்களூருவிலும், கணேஷ் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
இந்நிலையில் மற்றொரு மகன் கார்த்திக் (32) மட்டும் தனது தந்தையுடன் மீனாட்சிநகரில் வசித்து வந்தனர். திருமணமாகாத கார்த்திக் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணியனுக்கும், கார்த்திக்குக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது தந்தை சுப்பிரமணியனை இரும்பு குழாயால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார் .இந்த நிலையில் சுப்பிரமணியன் கத்தும் சத்ததினை காலை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர், பின்னர் கார்த்திக் பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனை அருகே சென்று ஒரு ஆம்புலன்ஸ் ஒட்டுனரிடம் தனது தந்தை இறநதுவிட்டார் அவரை வைக்க ஒரு பிரீசர் பேட்டி வேண்டும் என்று கேட்டு ஓட்டுநரை அழைத்து சென்றுள்ளார் ஆனால் வீட்டில் கார்த்திக்கின் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர், புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, துணை-ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 
வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
 
பின்னர் அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுப்பிரமணியன் உடலில், அவரது கை, கால், என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். அவரது அறையையும் காவல் துறையினர் சோதனை செய்த பொழுது அவரது அறை முழுவதும் காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன அதற்கு மத்தியில் அவரது படுக்கை இருந்தது இதனை பார்த்த காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது மன நிலை சீராக உள்ளதா எனவும் விசாரிக்க உள்ளனர், மேலும் வீட்டில் காலி சிகரெட் அட்டைகளும் குவியல், குவியலாக கிடந்தன. 

வீடு முழுவதும் பீர் பாட்டில்.. நடுவே படுக்கை.. கடலூரில் ஒரு பீர் சைக்கோ! தந்தையும் கொலை!
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திக் மதுவுக்கு அடிமையானதும், தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தந்தை சுப்பிரமணியனிடம் தகராறு செய்து வந்ததும், இந்நிலையில் நேற்று குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், தந்தை என்றும் பாராமல் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையையே அடித்து கொன்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
இராமநாதபுரம் ஊரணியில் மணல் கொள்ளை: புகார் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
யாருக்காகக் காத்திருக்கிறது இந்த அங்கன்வாடி? கட்டப்பட்டு மாதங்கள் கடந்தும் திறக்கப்படாத விசித்திரம்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!
அடுத்து எந்த கடை? அச்சத்தில் வியாபாரிகள்... மயிலாடுதுறையில் நள்ளிரவில் களமிறங்கிய 'பூட்டுடைப்பு' கும்பல்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget