மேலும் அறிய

மனைவியிடம் தொடர்ந்து வம்பு செய்த காவலர்...காண்டாகி கிரிக்கெட் பேட்டால் பெண்டு எடுத்த சககாவலர்!

கோவையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய வழக்கில் மற்றொரு காவலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் காவலராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. முருகானந்தம் அவருடைய 34 வயது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவைப்புதூரில் உள்ள பட்டாலியன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது, முருகானந்தம் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் காவலர் 32 வயதான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். 

சில மாதத்துக்கு முன்பு, முருகானந்தம் தனது பணி விஷயமாக டெல்லி சென்றுள்ளார். அதே சமயத்தில், ராமச்சந்திரனின் மனைவி கடந்த நவம்பரில் 2வது பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ராமச்சந்திரன் வீட்டில் தனிமையில் இருந்ததால் முருகானந்தத்தின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டு ஆசைவார்த்தைகூறி பழகி வந்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் குடும்ப சூழல் கருதி முருகானந்தத்தின் மனைவி, ராமச்சந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ராமச்சந்திரன் முருகானந்தத்தின் மனைவியை டார்ச்சர் செய்து தன்னி டம் நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாத முருகானந்தத்தின் மனைவி தனது கணவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரனை முருகானந்தம் கண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம்,கிரிக்கெட் மட்டையை கொண்டு ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது ராமசந்திரன் தப்பியோடியபோதும் விடாமல் துரத்தி சென்று காவலர் கேண்டீனில் வைத்து தாக்கியுள்ளார். சக போலீசார் அவரை தடுத்து, காயமடைந்த ராமச்சந்திரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து, ராமசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், முருகானந்தம் மனைவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், "ராமச்சந்திரன் மனைவியும் நானும் தோழிகள். அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது எனது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். தொடர்ந்து மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமச்சந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget