மேலும் அறிய

Thiruvanmiyur Railway Robbery: எல்லாமே நாடகம் - சென்னை ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்! சிக்கிய ஊழியர்!!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில்  ரயில்வே ஊழியரே திட்டமிட்டு ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகவும்,  கவுண்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. எஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 


Thiruvanmiyur Railway Robbery: எல்லாமே நாடகம் - சென்னை ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்! சிக்கிய ஊழியர்!!

இந்நிலையில் ரயில்வே ஊழியரான டீக்காராமே கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.  தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து டீக்காராம் இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளை தொடர்பாக போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் டீக்காராம் சிக்கியுள்ளார். 

ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாத நிலையில் ரயில் நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் டீக்காராமின் மனைவி ரயில் நிலையத்துக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் டீக்காராம் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடன் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் திக்குமுக்காடிய அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னுடைய மனைவியை வரவழைத்து டிக்கெட் கவுண்டரில் உள்ள பணத்தை டீக்காராமே எடுத்துக் கொடுத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் டீக்காராம் மற்றும் அவரது மனைவியை தவிர வேறு யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக, பொது இடத்தில் பலரின் கண்முன் நடந்த ஸ்வாதி படுகொலைக்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்கும் படலத்தில், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தியது. அதிக மக்கள் நடமாடும் ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லையா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். நீதிமன்றமும் இதுகுறித்துச் சரமாரியான கேள்விகளை எழுப்பியது.  நீதிமன்றமே அனைத்து ரயில் நிலையங்களிலும்  சிசிடிவி கேமரா கட்டாயம் என்று அறிவுறுத்தியும் அங்கு கேமரா பொருத்தப்படவில்லை. ஸ்வாதி கொலை நடந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
" அப்பாகிட்ட சொல்லாத " கள்ளக் காதலனுடன் சினிமாவுக்கு சென்ற தாய் - போட்டுக் கொடுத்த மகள்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
ஒரே சார்ஜில் 175 கிலோமீட்டர் மைலேஜ்! பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Oben Rorr EZ Sigma இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 175 கிலோமீட்டர் மைலேஜ்! பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Oben Rorr EZ Sigma இ பைக் - விலை எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Embed widget