மேலும் அறிய

வலி நிவாரணி மாத்திரை டூ போதை ஊசி.. இளைஞர்களுக்கு சப்ளை.. அதிர வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது

போதை மாத்திரைகளை வாங்கி, அதை தண்ணீரில் கலந்து போதை ஊசியாக மாற்றி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை சிலர் விற்பனை செய்வதாக எம்.கே.பி. நகர் காவல் உதவி ஆணையாளர் தமிழ்வானனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கொடுங்கையூர் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவகர் நகரில் நேற்று சந்தேகத்திற்கு இடமாக வகையில் வந்த வாலிபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபரிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வாலிபர் கொளத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பது தெரியவந்தது. மேலும் திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்த பிரபு (35) என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி, அதை தண்ணீரில் கலந்து போதை ஊசியாக மாற்றி, கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜாபர் (29) என்பவருடன் சேர்ந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரபு மற்றும் ஜாபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபு கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபல மருந்தகத்தில் விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வருவதும், அவர் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதும் தெரியவந்தது. மேலும் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையினை 400 ரூபாய்க்கு வாங்கி அதனை 800 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யா, பிரபு, ஜாபர் ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 582 மாத்திரைகள் மற்றும் ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் கூறுகையில், “வலி நிவாரணி மாத்திரைகளை சிலர், முறைகேடாக வாங்கி போதை ஊசியாக மாற்றி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பல மருந்தகங்களில் மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை கொடுப்பதினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் இந்த போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரபு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்வதால், அதை பயன்படுத்தி வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்துள்ளார். எனவே எந்த மெடிக்கல் ஷாப்களில் இருந்து அதிக அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்படுகிறது என்பது குறித்தும், அவ்வாறு மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்கும் உரிமையாளரை கைது செய்வதோடு, அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget