மேலும் அறிய

சென்னை திமுக வட்ட செயலாளர் கொலையில் ‛மெகா’ திட்டம்... அதிமுக வேட்பாளரிடம் தீவிர விசாரணை!

ராதாகிருஷ்ணனுக்கும், ராஜாவுக்கும் தொடர்பில்லை என்றாலும், இருவரும் தனித்தனி சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் திமுக 188 வது வட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் ஆகிய தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், செல்வத்தின் மனைவிக்கு வாய்ப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என அரசியல் ரீதியாக இந்த கொலை கடும் விமர்சனத்திற்கு ஆளானது. 

இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படையும் பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கீழ் பணியாற்றும் கூலிப்படை தான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

 

சென்னை திமுக வட்ட செயலாளர் கொலையில் ‛மெகா’ திட்டம்... அதிமுக வேட்பாளரிடம் தீவிர விசாரணை!
திமுக வட்ட செயலாளர் செல்வம்

அவர்கள் கூலிக்கு செய்திருந்தாலும், செய்யச் சொன்னது யார்? காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழில் ரீதியான போட்டியில் செல்வம் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் இடம் ஒன்று விற்பனை தொடர்பாக, செல்வத்திற்கு இருவருடன் மோதல் இருந்துள்ளது. ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து, அதிமுக சார்பில் வேட்பாளராக களம் கண்டவர். 

 

சென்னை திமுக வட்ட செயலாளர் கொலையில் ‛மெகா’ திட்டம்... அதிமுக வேட்பாளரிடம் தீவிர விசாரணை!
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராதாகிருஷ்ணன்

மற்றொருவர், சென்னை மடிப்பாக்கம் செம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா. இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜா மீது போலீசாருக்கு சந்தேம் எழுந்த நிலையில், திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட் அருகே காரில் சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை, தனிப்படை போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அதே போல , ராஜாவும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். 

சந்தேகத்தின் பேரில் தான் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. ராதாகிருஷ்ணனுக்கும், ராஜாவுக்கும் தொடர்பில்லை என்றாலும், இருவரும் தனித்தனி சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதோ போல, கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் மற்றும் அவர்களை ஏவிவிட்ட பிரபல ரவுடி ஆகியோரையும் தனிப்படை தீவிரமாக தேடிவருகிறது. அவர்கள் பிடிபட்டால், கொலைக்கான காரணமும், கொலையாளியும் கண்டுபிடிக்கப்படுவார்கள். 

மெகா திட்டமா?

செல்வம் கொலையில் திட்டமிட்ட சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் போட்டியில் அவர் கடும் முன்விரோதம் பெற்றிருந்தார். ஆனால் அவரை குறிவைக்க சிலர் காத்திருந்தனர். உள்ளாட்சி தேர்தல் வந்ததும். அவர் சீட் பெற முயற்சி எடுப்பார் என்பதை அறிந்து, அவரை தீர்த்துக் கட்ட இது தான் சரியான தருணம் என எதிர்பார்த்துள்ளனர். இந்த நேரத்தில் கொலை நடந்தால், அது அரசியல் கொலையாக மாறும் என்றும், தங்கள் மீதான சந்தேகம் தீரும் என்றும் கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நினைத்தது போலவே கொலையின் துவக்கத்தில் அது அரசியல் கொலையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளில் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம் என தெரியவந்தது. இருந்தாலும் இவையெல்லாம் இன்னும் உறுதிபடுத்தப்படாமல் உள்ளது. 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Embed widget