பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
ஜோலார்பேட்டை அருகே தகாத உறவில் ஈடுபட்ட தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்!. போலீசார் மகனை கைது செய்து விசாரணை

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தகாத உறவில் ஈடுபட்ட தாயை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. அவருடைய மனைவி கஸ்தூரிபாய் (53). இவர்களுக்கு மகன் சத்தியமூர்த்தி (26) மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மகள் திருமணமாகி தருமபுரி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கஸ்தூரிபாயின் கணவர் அண்ணாதுரை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபாய் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும், கஸ்தூரியின் மகன் சத்தியமூர்த்தி சென்னையில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
கஸ்தூரிபாய்க்கும் மற்றொரு நபருக்கும் தகாதஉறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தியமூர்த்திக்கு தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தாயாரை சத்தியமூர்த்தி பலமுறை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரிபாய் மீண்டும் தகாத உறவில் ஈடுபட்டதால் நேற்று சென்னையிலிருந்து வந்த அவரது மகன் சத்தியமூர்த்தி ஆத்திரமடைந்து நேற்று இரவு கஞ்சாபோதையில் கஸ்தூரிபாயை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் தாயை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டின் அருகே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தகாத உறவில் இருந்த தாயை மகனே கட்டையால் அடித்து கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்





















