மேலும் அறிய

சென்னைவாசிகளே உஷார்... வேலை செய்த வீட்டில் சம்பவம் செய்த நேபாள தம்பதி

வேலை செய்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதி கைது. 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்பு

வீட்டு பணிக்கு சேர்ந்த தம்பதிகள்

சென்னை நீலாங்கரை IB நகர் மூன்றாவது தெருவில் மகேஷ் குமார் ( வயது 60 ) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் பாதுகாப்பிற்காக நேபாள நாட்டை சேர்ந்த ரமேஷ் மானசாகி மற்றும் அவரது மனைவி பினிதா சாகி ஆகியோர்கள் வேலைக்குச் சேர்ந்து வீட்டின் பாதுகாப்பு மற்றும் வீட்டின் இதர வேலைகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மகேஷ்குமார் கடந்த 14.05.2025 அன்று காலை 8 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்ற ஊருக்கு சென்று குல தெய்வ வழிபாடு முடித்து இரவு 9.00 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 சவரன் தங்க நகைகள் , வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 50,000 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து , மகேஷ்குமார் நீலாங்கரை குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டதின் பேரில் கூடுதல் காவல் ஆணையாளர் சட்டம் - ஒழுங்கு தெற்கு மற்றும் இனை ஆணையாளர் தெற்கு ஆகியோரின் மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நீலாங்கரை உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலும் , CCTV கேமரா பதிவுகளின் அடிப்படையிலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது மேற்படி வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் மானசாகி , அவரது மனைவி பினிதா சாகி மற்றும் இருவர் என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் லக்னோ , பெங்களூர், பழியாகலான் மற்றும் நேபாளம் எல்லையான கோறி பண்டா, ககோரோலா ஆகிய இடங்களுக்கு விரைந்து சென்று விசாரித்து பின்னர் சொத்துக்களை மீட்க தக்க புலன் வைத்ததில் இன்று (2005-2025) காலை 08.00 மணியளவில் அண்ணா நகர் சாந்தி சந்திப்பில் சென்ட்ரல் ரயில்வே நிலையம் செல்வதற்காக எந்த ரமேஷ் மானசாகி, ( வயது 22 ) , அவரது மனைவி பினிதா சாகி, ( வயது 21 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.

பெரிய பங்களாவில் வேலை தேடும் தம்பதி

மேலும் விசாரணையில் , மேற்படி தம்பதி நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் , தங்களுடன் நேபாளத்தைச் சேர்ந்த பல நண்பர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வசித்து பெரிய பெரிய பங்களாக்கள் மற்றும் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து வீட்டில் யாரும் இல்லாத போது திருடுவதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் , தங்களும் பெங்களூரில் ஆதார் அட்டை வாங்கி வசித்து வந்ததாகவும் திருடியவுடன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தங்கள் நாட்டிற்கு சென்று இருத்து செலவு செய்து விட்டு பின்னர் இந்தியா வந்து எங்கேயாவது தங்கி வேலையை பார்ப்பது போல் நடித்து அந்த வீடுகளில் திருடுவதாகவும் தெரிவித்தனர்.

இரயில் மூலம் தப்பி செல்ல முயற்சி

வீட்டில் வேலை செய்த போது சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றதை பயன்படுத்தி அவர்கள் வீட்டின் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டின் பூட்டை உடைத்து திருடி உடனடியாக நேபாள் சென்றால் போலீசார் எல்லையில் வந்து பிடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அண்ணா நகரில் தங்கள் நாட்டினர் வசிக்கும் பகுதிகளில் ஐந்து நாட்கள் தங்கி விட்டு இன்று (20.05.2025) புறப்பட்டு ரயில் மூலமாக நேபாள நாட்டிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 66 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேற்படி குற்றம் செய்த நபர்களுக்கு உறுதுணையாக இருக்க நேபாள நாட்டைச் சேர்ந்த மேலும் இருவரை பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பது பற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த ஐந்து தினங்களுக்குக் குற்றவாளிகளை கைது செய்து களவு போன சொத்துக்களை மீட்ட காவல் துறையினரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் காவல்துறைக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு தகுந்த புலன்களுடன் துப்புத் துலக்கி களவு போன சொத்துக்களை மீட்ட நீலாங்க சரக உதவி ஆணையாளர். ஆய்வாளர் , உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் அடங்கிய தனிப்படையினரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

தலைப்பு செய்திகள்

காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget