மேலும் அறிய

Crime : 2-வது திருமணத்திற்கு பெண் தேடிய என்ஜினியர்.. பெண் குரலில் பேசி ஒன்றரை கோடி ஏமாற்றிய எம்.பி.ஏ. பட்டதாரி...!

கனடாவில் வேலை பார்த்த தமிழ்நாட்டு என்ஜினியரிடம் ரூபாய் ஒன்றரை கோடி நூதன முறையில் மோசடி செய்த எம்.பி.ஏ. பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அமைந்துள்ளது செம்புளிச்சம்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு வயது 42. இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், பச்சையப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரது விளம்பரத்தை கண்ட பிரகாஷ் (வயது 42) செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிரகாஷ் சென்னை பெரம்பூரில் உள்ள வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர். பச்சையப்பனிடம் பேசிய பிரகாஷ் தனது தங்கை விதவை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள முடியுமா? என்று கூறியுள்ளார்.
Crime : 2-வது திருமணத்திற்கு பெண் தேடிய என்ஜினியர்.. பெண் குரலில் பேசி ஒன்றரை கோடி ஏமாற்றிய எம்.பி.ஏ. பட்டதாரி...!

பச்சையப்பனும் சம்மதிக்க பிரகாஷ் தனது தங்கையின் செல்போன் எண்ணை அளித்துள்ளார். மேலும், அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி தனது தங்கை என்றும் பிரகாஷ் கூறியுள்ளார். பச்சையப்பனும் புகைப்படத்தில் உள்ள பெண்தான் பிரகாஷின் தங்கை என்று நம்பியுள்ளார். மேலும், செல்போனிலும் பிரகாஷின் தங்கையிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஆனால், பிரகாஷே பெண் குரலில் பேசி பச்சையப்பனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும், அவ்வப்போது பணத்தையும் பெற்று வந்துள்ளார்.

பச்சையப்பனும் தான் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்தான் என்று நம்பி அவ்வப்போது பண உதவி அளித்து வந்துள்ளார். சுமார் ஒன்றரை கோடி வரை பிரகாஷ் பச்சையப்பனை நம்பவைத்து பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில், பச்சையப்பன் கனடாவில் இருந்து சென்னை வந்துள்ளார். இங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கிய பச்சையப்பன் பிரகாஷைத் தொடர்புகொண்டு தங்களது தங்கையை காண வேண்டும் என்றும், அவருக்காக ஏராளமான பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Crime : 2-வது திருமணத்திற்கு பெண் தேடிய என்ஜினியர்.. பெண் குரலில் பேசி ஒன்றரை கோடி ஏமாற்றிய எம்.பி.ஏ. பட்டதாரி...!

ஆனால், பிரகாஷ் அதற்கு பிடி கொடுக்காமல் பேசி வந்துள்ளார். பின்னர், பச்சையப்பன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்த பிரகாஷ் அவரை மிரட்டியதுடன் அவர் வாங்கி வந்த எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களையும் அபகரித்து சென்றார். அப்போதுதான் பச்சையப்பனுக்கு தன்னிடம் பெண்குரலில் இத்தனை நாட்களாக பேசி வந்தது பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு தங்கை என்று யாருமே இல்லை என்பதும் தெரியவந்தது.

தனது தவறை உணர்ந்த பச்சையப்பன் தனது மனைவியிடம் சமரசமாக பேசி மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார். மேலும், பிரகாஷ் செய்த மோசடி குறித்தும் சென்னை, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பச்சையப்பன் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிரகாஷ் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும், பங்குச்சந்தையில் அவர் ஏராளமான பணத்தை இழந்துவிட்டதால் பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், செல்போனில் காட்டப்படும் பெண்ணின் புகைப்படத்தையும், குரலையும் மட்டும் வைத்து வெளிநாட்டில் வேலை பார்த்தவரை எம்.பி.ஏ. பட்டதாரி ஒன்றரை கோடி வரை நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Embed widget