மேலும் அறிய

Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

சென்னையில் மனைவியை பற்றி தவறாக பேசியதை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை நண்பர்களே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து அமைந்துள்ளது மாதவரம் பால்பண்ணை. இங்குள்ள 4வது யூனிட் பகுதியில் வசித்து வந்தவர் மோகன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், அவர் மோகனை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மோகனின் அண்ணன் செந்தில் மணலியில் வசித்து வருகிறார்.

மதுவிருந்து

அவர் தனியாக வசித்து வரும் தனது தம்பியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோகன் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்ட செந்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

போலீசார் விசாரணையில் மோகன் உயிரிழப்பதற்கு முதல்நாள் இரவு அவரது நண்பர்கள் 4 பேர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, மோகன் வீட்டிற்கு கடைசியாக வந்து சென்ற திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெபா என்ற ஜெயக்குமார் ( வயது 34) மற்றும் மோகன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 38) ஆகியோரை அழைத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

அடித்துக்கொன்ற நண்பர்கள்

இதனால், சந்தேகம் வலுத்த போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மோகன் ஜெயக்குமார், பிரபு மற்றும் மேலும் 2 நண்பர்களை தனது வீட்டிற்கு மது அருந்த அழைத்துள்ளார் என்றும், மது போதையில் பிரபு மோகனின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மோகன் பிரபுவுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மதுபோதையில் மோகனை தாக்கியுள்ளனர்.


Crime : மனைவியை பற்றி தவறாக பேசிய நண்பர்கள்...! தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை..! 2 பேர் கைது

நண்பர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மோகன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நான்கு பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த நிலையில்தான், போலீசார் விசாரணையில் ஜெயக்குமாரும், பிரபுவும் சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் உயிரிழப்புக்கு காரணமாகிய மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நண்பர்களே மதுபோதையில் நண்பனை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
முயல் பிடித்து தருகிறேன் ! சிறுமிக்கு ஆசை வார்த்தை ! சமையல் மாஸ்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!
விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில்.. டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு முன் ஜாமின்? தீர்ப்புக்காக ஒத்திவைப்பு !
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில்.. டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு முன் ஜாமின்? தீர்ப்புக்காக ஒத்திவைப்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Iran shuts Strait of Hormuz: அடங்காத அமெரிக்கா.. கடுப்பான ஈரான்.. மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Cuddalore: 6 மாத கால முயற்சி.. 750 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்.. சுத்தமான கடலூர்!
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
DC vs RCB: கில்லரான மில்லர்.. 100வது போட்டியில் ஆர்சிபிக்கு ஷாக்... டெல்லியின் சம்பவம்
Embed widget